districts

வேண்டாத வேலையும், பொருத்தமான செயலும்

நூல் விலை உயர்வுப் பிரச்சனையில் தமிழக அரசு மானியம் வழங்க வலியு றுத்தி பாரதிய ஜனதா கட்சி இன்று (வெள் ளிக்கிழமை) திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது. இப்பிரச்சனை ஒன்றிய அரசு தலையிட்டு தீர்க்க வேண்டிய விசயம் என்பது ஜவுளித் தொழில் துறையினருக்கு நன்றாக தெரியும். எனவே பாரதிய ஜனதா கட்சி இதில் குட்டையைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. இது திருப் பூர் மக்கள் மத்தியில் நன்றாகவே அம்பல மாகி இருக்கிறது. இதற்கிடையே திருப்பூர் ஏற்றுமதியா ளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜய குமார் வேண்டாத வேலையைச் செய்துள் ளார். திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர் கள் உள்ளிட்ட தொழில் துறையின ருக்கு, பாரதிய ஜனதா கட்சியின் உண் ணாவிரதத்தில் பங்கேற்க பரிந்துரைத்து மின்னஞ்சல் கடிதம் அனுப்பி உள்ளார். தொழில் அமைப்பின் பொதுச் செயலா ளர் பொறுப்பில் இருப்பவர் நேரடி அரசி யல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு தொழில் நலன் சார்ந்து செயல்பட வேண் டும். இதுதான் ஜனநாயக ரீதியில் பொருத் தமாக இருக்கும். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த விஜயகுமாருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.  பாஜகவின் மாவட்டத் தலைவர் எழு திய கடிதத்தை அப்படியே இவர் ஏற்றுமதி யாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். பாஜக முன்வைக்கும் கோரிக்கை நியாய மில்லாதது என்பதைத் தெரிந்தும் அவர் இதைச் செய்கிறார் என்றால்,

தொழில் நலனை விட பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற உணர்வே அவரை இவ்வாறு செய்ய வைத்துள்ளது. இது தொழில் துறையினர் மத்தியில் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. இது இவ்வாறு இருக்க திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண் முகம், வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் மத்திய அரசு நடவ டிக்கை எடுக்க ஸ்டாலின் கோரிக்கை  வைத்திருப்பதற்கு நன்றி தெரிவிப்ப தாக கூறியுள்ளார். பாஜகவின் உண்ணா விரதம் வெள்ளிக்கிழமை நடக்க இருக் கும் நிலையில், முதல்வர் மத்திய அர சுக்கு கோரிக்கை விடுத்திருப்பதும், அதற்கு ஏற்றுமதியாளர் சங்கம் நன்றி தெரிவித்திருப்பதும் இப்பிரச்சனையை தீர்க்க வேண்டியது யார் என்பதை சுட்டிக் காட்டுவதுடன், பாஜகவின் அரசியல்  ஆதாயம் தேடும் இழி நடவடிக்கையை மறைமுகமாக அம்பலப்படுத்துவதாக வும் உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கப் பொதுச் செயலாளர் விஜயகுமாரின் வேண்டாத வேலைக்கு, தலைவர் ராஜா சண்முகத்தின் கடிதம் பொறுத்தமான எதிர் நடவடிக்கையாகவும், சரியான பதில டியாகவும் உள்ளதாக ஏற்றுமதியாளர் களே பேசிக் கொண்டனர். (ந.நி)