districts

img

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் உத்தரவிட்டும் தேவேந்திரர் நகரில் இடிக்கப்படாமல் உள்ள தீண்டாமைச் சுவர்

அவிநாசி,பிப்.2- அவிநாசி தேவேந்திரர் நகர் பகுதியில் உள்ள தீண்டாமைச்சுவரை இடிக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவ லர் உத்தரவிட்டும், இடிக்கப்படாமல் உள் ளது. அதை உடனடியாக இடிக்க கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றியக் குழு சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஈஸ் வரமூர்த்தி வியாழனன்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சிக்குட்பட்ட தேவேந்திரர்நகர் பகுதியில் 600க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின் றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகு திக்கு முன்புறமுள்ள காலி இடத்தை வீட்டு மனைகளாக பிரித்து விஐபி நகர் என பெய ரிட்டு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும், பட்டியலின மக்களின் வாழ்விடத்தை  மறைத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு  சுவர் எழுப்பியுள்ளனர். இச்சுவர் கட்டும் போதே இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இம்மனைகள் முழுவதும் விற் பனை செய்யப்பட்டு அதன் சாலைகளும் பொது மனைகளும் ஊராட்சி நிர்வாகத் துக்கு ஒப்படைக்கப்பட்டு ஆண்டுகள் பல  கடந்த பிறகும் அந்த சுவர் இன்னும் இடிக்கப்ப டாமல் அப்படியே உள்ளது.  அரசின் இசேவை மையம், நியாயவிலை  கடை, பனியன் கம்பெனிகள் ஆகியவை  இந்த சுவருக்கு பின்னால் அமைந்துள்ளதால்  ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண் டிய நிலை  உள்ளது. இது மனித உரிமையை  மீறிய செயலாகும்.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கடந்த ஆண்டு  அவிநாசி ஒன்றிய  ஊராட்சி நிர்வாகத் திற்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர்,  மாநில எஸ்.சி./எஸ்.டி., ஆணையத்துக்கும் புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். இம்ம னுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் சுவரை இடிக்க உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலர் தேவேந்திரர் நகர் பகுதியில் உள்ளது  தீண்டாமை சுவர்தான் என்றும், அதை உடனடி யாக அகற்ற நகல் 8223/2023 (02/06/2023) வட் டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள் ளார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏழு  மாதங்கள் கடந்த பின்பும் இன்னும் தீண்டா மைச்சுவர் இடிக்கப்படாமல் அப்படியே உள் ளது. பட்டியலின மக்கள் வசிக்கும் தேவேந்தி ரர் நகரில் பகுதியில் மனித உரிமையை மறுக் கும் வகையில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச்  சுவரை உடனடியாக இடித்து அகற்றிட வேண் டும். பட்டியலின மக்களின் குடியிருப்பை மறைத்து தீண்டாமைச்சுவர் எழுப்பிய விஐபி  நகர் மனை விற்பனையாளர்கள் மீது சட்டப்ப டியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்  கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்து கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  நந்தகோபால், மாவட்டக்குழு உறுப்பினர் பழ னிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.