உடுமலை, ஜன.2- கரிசல் பூமியில் பனி பொழிவிற்கு வளரும் கொண்டக்கடலை மற்றும் கொத்தமல்லி பயிர்கள் பருவம் தவறிய மழையால் பாதிக்கபட்டு உள்ளது. குடிமங்கலம் மற்றும் மடத்துக்கு ளம் பகுதியில் உள்ள கரிசல் மண் கொண்ட மானாவாரி நிலங்களில் டிசம் பர், ஜனவரி மாதங்களில் பெய்யும் பனிக்கு வளரும் பயிற்களான கொண் டக்கடலை மற்றும் கொத்தமல்லி விளை விக்கப்படும். இந்த ஆண்டும் கொண்டைக்க டலை சுமார் 8 ஆயிரம் ஏக்கரிலும், கொத் தமல்லி சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் விவசா யம் செய்யப்பட்டிருந்தது. கரிசல் பூமி யில் பனிப்பொழிவில் மட்டும் வளரும் வகையில் இந்த பயிர்கள் இருப்பதால், இந்த ஆண்டு பருவம் தவறி கனமழை பெய்ததால் செடியில் இருக்கும் பூ மற் றும் பிஞ்சுகள் கீழே விழுந்து செடிகள் மட் டுமே காணப்படுகின்றன. இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியாமல் இருக்கும் கரிசல் மண்ணில், கொண்டக்கடலை மற்றும் கொத்தமல்லி பனிப்பொழிவை மட் டுமே நம்பி விளைச்சல் செய்ய முடியும். ஏக்கர் ஒன்றுக்கு இந்த பயிர்கள் விளைச் சல் செய்ய உழவு, விதை, உரம் மற்றும் நான்கு முறைக்கு மேல் மருந்து என பத் தாயிரத்திற்கும் மேல் செலவு செய்து, விளைச்சல் கைக்கு வரும் நிலையில் மழை பெய்ததால், செடிகளில் இருந்த பூ மற்றும் பிஞ்சுகள் கீழே விழுந்து விட்டன. எனவே கொண்டைக்கடலை விளைச்சல் பாதிப்பு குறித்து வேளாண் துறையும், கொத்தமல்லி பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகா ரிகள் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.