districts

சுகாதாரமற்ற காலிபாட்டில்கள் மன உளைச்சலில் டாஸ்மாக் ஊழியர்கள்

உதகை, மே 24- காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில், சுகாதார மற்ற நிலை யில் பாட்டில்கள் கடைகளில் குவிவ தால், டாஸ்மாக் ஊழியர்கள் மன உளைச் சலுக்கு ஆளாகியுள்ளதாக சிஐடியு நீல கிரி மாவட்டக்குழு குற்றஞ்சாட்டியுள் ளது.  இதுகுறித்து சிஐடியு நீலகிரி மாவட்ட தலைவர் எல்.சங்கரலிங்கம், செயலா ளர் சி.வினோத் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஆகியோருக்கு அளித் துள்ள மனுவில் தெரிவித்திருப்பதா வது, நீலகிரி மாவட்டத்தில், காலி பாட் டில் திரும்ப பெறும் திட்டத்தில் சுகாதார மற்ற காலி பாட்டில்களையும் திரும்ப  பெறப்படுகிறது. இதனால், கடையில் துர் நாற்றம் மற்றும் சுகாதாரமற்ற நிலை யில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். இந்நிலையில், கடையின் வெளியே, அருகில் உள்ள கடைக்காரர்கள் தூக்கி வீசும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிற குப்பைகளையும் டாஸ்மாக் ஊழியர் களை சுத்தம் செய்ய வைப்பதும், அபரா தம் விதிப்பதும் ஒரு புறம் இருக்க, புதி தாக சில சமூக விரோதிகள், டாஸ்மாக்  கடைகளில் தினசரி மாமுல் தர வேண் டும் என மிரட்டி வருகிறார்கள்.  இதனால் கடை ஊழியர்கள் மன  உளைச்சலுடன் உள்ளனர். பணிக்கு  வரவே தயங்குகின்றனர். மேலும், வாடிக் கையளர்கள், டாஸ்மாக் ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கும் அதிகரித்து உள் ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் டாஸ் மாக் ஊழியர்களை சமூக விரோதிகளிட மிருந்து பாதுக்காக்கவும், மாமூல் வசூலை தடுத்து நிறுத்தவும் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.