தருமபுரி, அக்.1- இட்லப்பட்டி - தீர்த்தமலை தேசிய நெடுஞ்சாலையில் திறக் கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம்பட்டி ஊராட்சிக் குட்பட்ட இட்லப்பட்டி - தீர்த்தமலை தேசிய நெடுஞ்சாலை யின் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடையை கடந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்க ளில் மது பிரியர்கள் குடித்துவிட்டு சாலையிலேயே படுத்து விடுகின்றனர். எனவே,மக்கள் அதிகமாக கூடும் பகுதி என்பதால் தீர்த்தமலை தேசிய நெடுஞ்சா லையில் உள்ள டாஸ்மாக்கடையை மூட வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டப் பொருளாளர் வீரப்பன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் கே.குமரேசன், தலைவர் ஜடையாண்டி, வாலிபர் சங்க மாவட்ட அமைப்பாளர் குறளரசன், ஒன்றியச் செயலாளர் பிரவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.