districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நீலகிரியில் வரலாறு காணாத சூறாவளிக் காற்று

உதகை, ஜூலை 22- நீலகிரியில் வரலாறு காணாத சூறாவளிக் காற்றால்  பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கனமழை பெய்து  வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று  ஓய்ந்தது. இந்நிலையில், ஞாயிறன்று மதியத்திலி ருந்து வரலாறு காணாத அளவுக்கு சூறாவளி காற்று  வீசி வருகிறது. காற்றின் வேகம் நள்ளிரவும்  தொடர்ந் தது. இதனால், உதகை, குந்தா, லவ்டேல், தீட்டுக்கல்,  தமிழக சாலை, கிண்ணக்கொரை சாலை, கோரகுந்தா,  அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்து பவர் ஷா  உதவியுடன் மரங்களை அறுத்து, அதை அகற்றும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிக ரித்த காரணத்தினால் உதகை, குந்தா, குன்னூர், கோத் தகிரி ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட் டும் திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்ட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் போதிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வா கம் சார்பில் தெரிவித்துள்ளது. மேலும், உதகை, கோடத்து மந்து பகுதியில் சாலை ஓரம் நிறுத்தப்பட்ட கார் கள் மீது மரங்கள் விழுந்து சேதமாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, பாதிப்படைந்த பகுதிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர்  லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்ட பல்வேறு அதிகாரி கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு உத விகளை வழங்கினர்.

கோரிக்கைகளை ஏற்காத ஏபிடி நிர்வாகம் தர்ணா போராட்டம் நடத்த சிஐடியு முடிவு

சேலம், ஜூலை 22- தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்காத ஏபிடி  நிர்வாகத்தை கண்டித்து ஒரு நாள் தர்ணா போராட் டம் நடத்த சிஐடியு மகாசபையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. சேலம் சிஐடியு - ஏபிடி கிளையின் மகாசபை ஞாயி றன்று நடைபெற்றது. இதில், சிஐடியு சாலை போக்கு வரத்து மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன், சங்கத்தின் மூத்த நிர்வாகி தமிழரசன், தலைமை சங்கப் பொருளாளர் தி.செவ்வந்தியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, கிளைச்செயலாளர் பி.கணே சன் வேலை அறிக்கை முன்வைத்தார்.  இதில் தொழிலாளர் பிரச்சினை சம்பந்தமாக நிர்வா கத்திடம் பலமுறை பேசியும் இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை எனவும் இதனால் ஒரு நாள்  தர்ணா போராட்டத்தை நடத்துவது, தொழிலாளர்க ளுக்கு முறையாக 7 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங் கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதில், தலைவராக, கே.கோவிந்தன், செயலா ளர் பொருளாளர் எ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகி கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகை

ஈரோடு, ஜூலை 22- மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்  என அஞ்சல் துறை ஓய்வூதி யர்கள் வலியுறுத்தியுள்ள னர். ஈரோட்டில் அகில இந் திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் 6 ஆவது கோட்ட மாநாடு ஞாயி றன்று நடைபெற்றது. மாநாட் டுக்கு கோட்டத் தலைவர் சுப் பிரமணியன் தலைமை வகித் தார். செயலாளர் ராமசாமி  ஆண்டறிக்கை வாசித்தார்.  அஞ்சல் துறை ஓய்வுபெற் றோர் சங்கத்தின் அகில இந் தியத் தலைவர் ராகவேந்தி ரன், மாவட்டத் தலைவர் கணேசன், ஓய்வூதியர் ஒருங் கிணைப்புக் குழு தலைவர்  மணிபாரதி சங்க நிர்வாகி கள், ஓய்வூதியா்கள் பலர் பங் கேற்றனர். மாதாந்திர மருத்துவப் படியை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், 65 வயது முதல் கூடுதல் ஓய்வூ தியம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரயில்  கட்டணச் சலுகையை மீண் டும் வழங்க வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

குற்றவியல் சட்டங்களை எதிர்த்து மங்கலத்தில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 22 - ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல்  சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்து வதைக் கைவிட வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர்  தெற்கு ஒன்றியக் குழு  சார்பில் மங்கலத் தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மங்கலம் நால்ரோடு அருகில் திங்க ளன்று காலை ஊராட்சி மன்ற முன்னாள்  உறுப்பினரும், கட்சி கிளை முன்னாள் செயலாளருமான குப்புசாமி தலை மையில் நடைபெற்றது. கோரிக்கையை  வலியுறுத்தி இடுவாய் ஊராட்சி மன்றத்  தலைவரும், கட்சியின் மாவட்டக் குழு  உறுப்பினருமான க.கணேசன், ஒன்றி யக்குழு உறுப்பினர் கே வேலுசாமி ஆகி யோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் கருப்புசாமி, அங்கு லட்சுமி, கிளைச் செயலாளர்கள் சுந்த ரம், கந்தசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற  உறுப்பினர் முருகேசன், தொடக்க  வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநர் பொன்னுச்சாமி, வாலிபர்  சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் தினேஷ் ஆகியோருடன் கட்சியின் முன்னணி ஊழியர்களும், பொதுமக்களும் திர ளாக பங்கேற்றனர். மங்கலம் கிளை உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.