கோவை, ஜூன் 16- தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழக மாணவர் தரவரிசை பட் டியல் வெள்ளியன்று வெளியிடப்பட் டது. இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார். கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் திற்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெய லலிதா மீன்வளப்பல்கலைக்கழகத் திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற அறி விப்பு வெளியிடப்பட்டது. 5,361 இடங் களை நிரப்புவதற்கு இணையதள விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இள மறிவியல் மாணவர்கள் சேர்க் கைக்கு மொத்தம் 41 ஆயிரத்து 434 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 36 ஆயிரத்து 612 பேர் தரவரி சைக்கு தகுதி பெற்றனர். அதில் பெண்கள் 21 ஆயிரத்து 384, ஆண்கள் 12 ஆயிரத்து 333 பேர் விண்ணப் பித்தனர். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 887 மாண வர்கள் விண்ணப்பித்துள்ளனர். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசாங்க பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் இஎம்ஐ எண் கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் சரி பார்க்கப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் பயில 9997 மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரர் கள் இட ஒதுக்கீட்டில் 309 பேர் விண் ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனா ளிகள் மாணவர்களுக்கு மொத்தம் 5 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டு, இந்த கல்வியாண்டில் 128 மாணவர் கள் சேர்க்கப்படுவார்கள். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 790 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்கள் 20 மாணவர் கள் சேர்க்கப்படுவார்கள். தொழில் முறை கல்வி பயின்ற மாணவர்க ளுக்கு 5 சதவிகிதம் இடங்கள் ஒதுக் கப்பட்டு 242 மாணவர்கள் சேர்க்கப் படுவார்கள். இந்நிலையில், வெள்ளியன்று கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் வெ.கீதா லட்சுமி, இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டி யலை வெளியிட்டார். இதில், முதல் இடத்தை விழுப்புரத்தைச் சேர்ந்த திவ்யாவும், 2 ஆம் இடத்தை மது ரையைச் சேர்ந்த ஸ்ரீராம், 3 ஆம் இடத்தை தென்காசியைச் சேர்ந்த முத்துலட்சுமி ஆகியோர் பிடித்துள்ள னர். முன்னாள் ராணுவ வீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளை யாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு இந்த மாதம் 3 ஆவது வாரத் தில் தொடங்க உள்ளது. தகுதியா னவர்கள் இந்த மாத கடைசி வாரத் தில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படு வார்கள். இணைய வழி கலந்தாய்வு மற்றும் பொது இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, ஜூலை முதல் வாரத்தில் இருந்து துவங்கவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.