districts

img

ஒன்றிய பட்ஜெட்டின் நகல் எரிப்பு போராட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவிப்பு

சேலம், ஜூலை 27- விவசாயிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டின் நகலை எரித்து, மோடி அரசின் எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடைபெற உள்ளதென ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ராம மூர்த்தி சேலம் சிறை தியாகிகள் தலைமையில் நடை பெற்றது. மாநில நிர்வாகி சந்திரமோகன், மாநில ஒருங்கி ணைப்புக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். இக்கூட்டத் தில், ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், விவசா யிகளுக்கு விரோதமானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்திற்கு அமைப்பின் அகில இந்திய நிர்வாகிகள் குழு அறைகூவல் விடுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஜூலை 31 ஆம் தேதியன்று 2 ஆயிரம் கிராமங்களில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற உள்ளது. அதன்ஒருபகுதியாக சேலம் மாவட்டத் தில் 100 கிராமங்களில் நகல் எரிப்பு போராட்டம் நடத்தி டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், வரலாற்று சிறப்பு மிக்க ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க நாளான ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்று, ‘கார்ப்பரேட்டுகளே இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற கோரிக்கையை முன்வைத்து சேலம், அயோத்தியாப்பட்டிணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று “இயற்கையை பாதுகாப்போம் – சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து சேலம், ராமகிருஷ்ணா பார்க், சேலம் சிறைத்தியாகிகள் நினைவகம், கேஎஸ்.அர்த்தனாரி நினைவரங்கில் கருத்தரங்கம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. முன்ன தாக, இக்கூட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்டத் தலைவர்கள் ஏ.அன்பழகன், என்.கே.செல்வ ராஜ், பி.தங்கவேலு, ஜி.கணபதி, நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.