சேலம் மார்ச் 28- சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் பைத்தூர் பகுதியில் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நட வடிக்கையை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கேஸ், உள்ளிட்ட உணவு பொருட் கள் விலை உயர்வை கண்டித்தும், திரிபுராவில் கொலைவெறியாட்டம் நடத்தி கொண்டிருப்பதை கண்டித்து ஆத்தூர் வட்டக் குழு சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரதராஜன் தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் சிறப்பு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, ஆத்தூர் வட்டக் கிளை செயலாளர் ஏ.முருகேசன் ஆகியோர் உரையாற்றினர். தாலுகா குழு உறுப்பி னர்கள் பிரபு, பெரியண்ணன், தங்கம்மாள் உள்ளிட்ட திராளனோர் பங்கேற்றனர்.