திருப்பூர், ஏப்.19- இந்திய வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் ஒன்றிய அர சின் நடவடிக்கை கண்டித்து மாணவர் சங்கம் திருப்பூர் மாவட் டகுழு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு வெளியிட் டுள்ள வரலாற்று பாடநூலில் முகாலாயர்களின் வரலாற்றை யும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மெளலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. ஒன் றிய அரசின் இந்த போக்கை கண்டித்து தேசம் தழுவிய போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய குழு அறைகூவல் விடுத்தது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் கும ரன் சிலை முன்பு மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர் பிரவீன் குமார் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட துணை செயலாளர் மோகன பிரியா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுஜிதா, உதயராஜ் உள்ளிட்ட 30க்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.