districts

img

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை

கோவை, ஜூலை 24- ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாய, மக்கள் விரோத நடவ டிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதும் மத்திய  தொழிற்சங்கங்கள் ஆவேச  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின் றனர். இதன்ஒருபகுதியாக தமிழ கத்தில் புதனன்று பரவலான பகுதிக ளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒன்றிய அரசு மூன்று குற்றவி யல் சட்டங்கள் திரும்ப பெற வேண் டும், ஒன்றிய நிதிநிலை அறிக்கை யில் தொழிற்சங்க கோரிக்கை களை இடம்பெற செய்ய வேண் டும், தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற  வேண்டும், விவசாயிகளின் விளைப்  பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கிட வேண் டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  கோவையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவ டிக்கைக் குழு சார்பில் சிவானந்த காலனி டாடாபாத் அருகில் புத னன்று கோரிக்கை முழக்க ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், ஏஐ டியுசி தலைவரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் கே. மனோகரன். எல்பிஎப் ப.மணி, வி. ஆனந்த், ஐஎன்டியுசி பி.சண்முகம்,  துளசிதாஸ், ஏஐடியுசி சி.தங்க வேல், கே.எம்.செல்வராஜ், எச்எம் எஸ் டி.எஸ்.ராஜாமணி, க.வீரா சாமி, எம்எல்எப் மு.தியாகராசன், வி.சரவணக்குமார். ஏஐசிசிடியு ஆர்.பாலசுப்பிரமணியன், வெங்க டாசலம், எஸ்டிடியு கே.ஷாஜகான்,  கே.பசீர், எல்டியுசி மு.ஜெயபிர காஷ் நாராயணன், ஜி.மணிகண் டன் மற்றும மாநில, மாவட்டத் தலை வர்கள் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர். ஈரோடு இதைபோன்று, ஈரோட்டி மாவட்டம், சூரம்பட்டி நால் ரோட் டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு எஸ்எம்எஸ் மாவட்டச் செய லாளர் பி.சண்முகம் தலைமை வகித்தார். திமுக சட்டத்துறை மாநில துணைச்செயலாளர் மா.சு. ராதாகிருஷ்ணன், மூத்த வழக்கறி ஞர் ப.பா.மோகன் ஆகியோர் சிறப் புரையாற்றினர். ஏஐடியுசி சின்ன சாமி, எல்பிஎப் எஸ்.கோபால், ஐஎன் டியுசி என்.துரைசாமி, எம்எல்எப் காளியப்பன், ஏஐசிசிடியு கார்த்தி கேயன், எம்எல்எப் துரை.பாலு, டிடி எஸ்எப் உத்திர ராஜன் மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம், மாவட்ட துணைத் தலை வர் சி.ஜோதிமணி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். திருப்பூர் இதேபோன்று, திருப்பூர் தியாகி  குமரன் சிலை முன்பாக புதனன்று  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு எச் எம் எஸ் மாவட்டச் செய லாளர் ஆர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட் டத் தலைவர் சி. மூர்த்தி, மாவட்டச்  செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்டப்  பொருளாளர் ஜி. சம்பத், ஏஐடியுசி  மாவட்டச் செயலாளர் என்.சேகர்,  ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் அ.சிவசாமி, எல்பிஎஃப் சார்பில்  நாராயணசாமி, எம்எல்எஃப்  சார் பில் மனோகரன் உள்ளிட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட் டத்தில் மத்திய தொழிற்சங்கங் களை சேர்ந்தவர்கள் பெருந்திர ளாக கலந்து கொண்டனர்.