சேலம், டிச.31- மின்துறையை தனியார் மயமாக்க முயற்சித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து, சிஐடியுவினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். சண்டிகர், உத்தரபிரதேச மாநிலங்களில் மின் துறையை தனியார்மயமாக்கும் நடவ டிக்கையை நிறுத்த வேண்டும். தனியார் மயமாக்கலை எதிர்த்து போராடும் மின் ஊழியர்களை எஸ்மா சட்டத்தை கொண்டு மிரட்டக்கூடாது. ஒரு மாதமாக போராடும் மின் ஊழியர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்திய தொழிற்சங்க மையத்தின் சேலம் மாவட்டக் குழு சார்பில், செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட்டப் பொருளா ளர் வி.இளங்கோ, துணை நிர்வாகி பி.பன்னீர் செல்வம் உட்பட ஏரளாளமானோர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசிற்கெதிராக முழக்கங் களை எழுப்பினர்.