அவிநாசி,டிச.24 அவிநாசியை நகராட்சியாக தரம் உயர்த்தி, பழங்கரை ஊராட்சியை இணைக்க அவிநாசி ஒன்றியக் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. அவிநாசி ஊராட்சி ஒன்றியக் கவுன் சிலர்கள் கூட்டம் செவ்வாயன்று ஊராட்சி ஒன்றிய பொறுப்புத் தலைவர் பிரசாந்த் குமார் தலைமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் குமார், விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் கார்த்திகேயன் பேசுகை யில், பழங்கரை ஊராட்சியில் இரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய அவிநாசி நகருக்கு வருகின்றனர். எனவே பழங்கரை ஊராட்சியை மாநக ராட்சியுடன் இணைக்க கூடாது. மாறாக அவிநாசியை நகராட்சியாக தரம் உயர்த்தி, பழங்கரையை இணைக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் ஊராட்சி ஒன்றியக் கவுன்சி லர் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தனிநபர் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி ரமேஷ்குமார், பொறுப்புச் சேர்மன் பிரசாந்த் குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் அளிக்கலாம், பின்பு தீர்மானம் நிறைவேற்றலாம் என கூறினர். இருப்பினும் திமுக ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் மற்றும் சேதுமாதவன் ஆகியோர் உறுதியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினர். இதைதொடர்ந்து வருகை தந்திருந்த 16 ஒன்றியக் கவுன்சிலர்களுக் கும் ஆட்சேபனை தெரிவிக்காததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக வைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் அய் யாவு பேசுகையில், எங்கள் பகுதியில் வேலை நடைபெறுவது குறித்து எங்க ளுக்கு தெரிவதில்லை. அதிகாரிகளும் தெரிவிப்பதில்லை. எதிர்வரும் காலங்க ளில் இது போல் நடைபெறாமல் தகவல் அளிக்க வேண்டும். கல்லுமடை குட்டை யில் மேல்நிலை தொட்டிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட பணிகள் இன் னும் தொடங்கப்படாமல் உள்ளது. இப்ப ணிகளை உடனடியாக துவங்க வேண் டும். நல்லக்கட்டிபாளையம் இந்திரா குடியிருப்பில் பழுதடைந்த வீடுகளை சீரமைக்க அரசு வழங்கும் நிதி பொது மக்களுக்கு முழுமையாக கிடைப் பதில்லை, முறையாக சென்றடைய நட வடிக்கை வேண்டும் என தெரிவித்தார். திமுகவைச் சேர்ந்த சேது மாதவன் பேசுகையில், பழங்கரை ஊராட்சி பெரி யாயிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய கட்டிடத்திற்கு சுற்றுச்சு வர் கட்டித் தர வேண்டும். தேவம்பாளை யம் அம்மன் நகரில் தார் சாலை அமைக்க வேண்டும். பெரியாயிபாளை யம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என தெரி வித்தார். இதைதொடர்ந்து ஒன்றியக் கவுன்சி லர் பதவி காலம் வரும் ஜன.5 ஆம் தேதி யுடன் நிறைவடைவதாலும், இது இறு திக் கூட்டம் என்பதாலும் ஒன்றியக் கவுன் சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் உள்ளிட்டோர் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.