திருப்பூர், நவ. 24 - இந்தியாவில் கார்ப்பரேட் பெரு நிறுவ னங்களுக்கும், எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் ஒரே மாதி ரியான ஜிஎஸ்டி வரி விதிப்பு தனிநபர் வரு மானத்தை பாதிக்கும்; இது சரியானதல்ல என்று திருப்பூர் காம்பாக்டிங் சங்க மகாசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிட் காம்பாக்டிங் உரிமையாளர்கள் சங் கத்தின் 24ஆவது மகாசபை கூட்டம் காந்திந கர் அரிமா சங்கத்தில் அண்மையில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சார்ஜா துரைசாமி தலைமை வகித்தார். செய லாளர் ஈஸ்வர மூர்த்தி ஆண்டறிக்கை வாசித் தார். பொருளாளர் முத்துசாமி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு: யூக வணிகர்கள் சூதாட்ட முறையில் பஞ்சு விலையை உயர்த்துவதை தடுக்க ஒன்றிய அரசு, பருத்தி ஆலோசனைக் குழு மற்றும் மத்திய பருத்திக் கழகங்கள் மூலம் கண்காணித்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். பருத்தி மற்றும் நூல் ஏற் றுமதிக்கு பதிலாக ஆடையாக தயாரித்து ஏற்றுமதி செய்வதால் வேலைவாய்ப்பு, அந்நி யச் செலாவணி அதிகரிக்கும்.
மெட்ரோ ரயில் மூலம் அருகில் உள்ள நகரப் பகுதிகளை இணைத்தல், போக்குவ ரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல அடுக்கு மேம்பாலங்களை உருவாக்குதல், அடுக்கு மாடி குடியிருப்புகள் மூலம் தொழிலாளர்க ளுக்கு பாதுகாப்பான குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருதல் உள்பட திருப்பூர் தொழில் நகரத்திற்கு போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஒன்றிய, மாநில அரசுகள் நிறை வேற்றித் தர வேண்டும். பிரதமரால் அடிக்கல் நாட்டி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத் துவமனையை ஒன்றிய, மாநில அரசுகள் உட னடியாக கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ‘பைப் லைன்’ எரி வாயு திட்டத்தை நடைமுறைப்படுத்தி மானிய விலையில் எரிவாயு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
தற்போதுள்ள தொழில் நிலையை கருத் தில் கொண்டு, நிறுவனங்களுக்கான மின் கட் டணத்தில் பழைய நிலையை நீடித்து, புதிய கட்டணங்களை இப்போதைக்கு நடைமு றைப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள் ளப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில் சிக் கல்களை கருத்தில் கொண்டு, வங்கிக் கடன் தள்ளுபடி சலுகையை மத்திய, மாநில அரசு கள் வழங்கி உதவ வேண்டும். ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில் கார்ப்பரேட் பெரிய நிறுவனங்களுக்கும், எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்க ளுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு சரியா னதல்ல. இது தனி மனித வருமானம் உயர்வ தில் சிக்கல் ஏற்படுத்தும் என்பதை ஒன்றிய அரசு உணர்ந்து, தொழில் நிறுவனங்களின் பொருளாதார தன்மையை உணர்ந்து, கார்ப் பரேட் நிறுவனங்களுக்கும், சிறு, குறு, நடுத் தர நிறுவனங்களுக்கும் வேறுபட்ட விகிதத் தில் வரி விதிப்பை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இந்த கூட்டத்தில் சங்கத்தின் புதிய பொரு ளாளராக தேர்வு செய்யப்பட்ட ஜுபிடர் குண சேகரன் நன்றி கூறினார்.