சேலம், டிச.21- அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், சேலம் கோட்டத்திலுள்ள 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் ரயில்வே கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக்குழுவின் 26 ஆவது கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின் ஹா தலைமை வகித்தார். கூடுதல் கோட்ட மேலாளர் பி.சிவலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் எம்.பூபதிராஜா, முதுநிலை இயக்க மேலாளர் அனித் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள், ரயில் பயணிகள் ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த அத்தியண்ணன், சுரேஷ், சுப்பிர மணி, அருண்குமார், ஜெகநாதன் உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் பங்கேற் றனர். இதைத்தொடர்ந்து, ரயில் பய ணிகள் ஆலோசனைக்குழுவினர் பய ணிகளின் வசதியை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். அதில், புதிய ரயில்களை இயக்குதல், கூடுதல் நடைகளை இயக்குதல், ரயில் நிறுத் தங்களை அதிகரித்தல், நடைமே டைகளை நீட்டித்தல், விரிவாக்கம் செய்தல், மேம்பாலங்கள், தரைப்பா லங்கள், ரயில் நிலையங்களை மேம் படுத்த வேண்டும் என வலியுறுத் தினர். அதேபோல, கோவை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை போல, மேலும் பல ரயில் களை சேலம் கோட்டத்தில் இயக்க வேண்டும் என ஆலோசனை தெரி வித்தனர். ரயில் பயணிகள் ஆலோ சனைக்குழுவின் கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள், சேலம் ரயில்வே கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத் தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வரு கின்றன. குழுவினரின் கோரிக்கை கள் இத்திட்டத்தின் மூலம் நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சில கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றவும், இதர சில கோரிக்கைகள் உயர் அதிகாரி களின் கவனத்துக்குக் கொண்டு சென்று மேல் நடவடிக்கை எடுக்கப் படும் என பதிலளித்தனர். இதைத்தொடா்ந்து, ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா பேசுகையில், பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் சேலம் ரயில்வே கோட்டம் சிறப் பாகச் செயல்பட்டு வருகிறது. ஆலோசனைக்குழுவினரின் கோரிக் கைகள் மற்றும் ஆலோசனைகளை அதிகாரிகள் முறையாகப் பரிசீ லித்து செயல்படுத்துவார்கள். ரயில்வே உள்கட்டமைப்பை மேம்ப டுத்தும் பல்வேறு கட்ட பணிகள் நடை பெற்று வருகின்றன. முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளுக்கான கைப்பேசி செயலி மற்றும் தானி யங்கி பயணச்சீட்டு இயந்திரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும், என்றார்.