districts

img

கால்நடை மருத்துவமனை திறக்க ஊஞ்சலூர் விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு, ஜன.23- பூட்டிக்கிடக்கும் ஊஞ்சலூர் கால்நடை மருத்துவ மனையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் பகுதியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல னுக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கொளத்துப் பாளையம் கிராம மக்களின் சொந்தப்பணத்தில் கிளை மருத்துவமனை கட்டப்பட்டது. பின்னர் இது அரசிடம் ஒப்படைக்கப்பட்டு கால்நடை துறையால் திறப்பு விழா நடைபெற்று, செயல்பாட்டில் இருந்து வந்தது.  ஆனால், தற்போது இந்த கால்நடை மருத்துவமனை மூடப்பட்டு காட்சி பொருளாக காணப்படுகிறது. இத னால் சமூக விரோதிகள் தங்கும் இடமாக மாறி வருவ தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, கால்நடை துறை அதிகாரிகள் உடனடியாக இந்த மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.