districts

img

விளையாட்டில் அசத்திய மாற்றுத்திறனாளிகள்

கோவை, ஆக. 14- கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் திறன்களை வெளிப்படுத்தி அசத்தினர். 76 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில்  மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், கோவைபு தூர் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான  பிரத்யேக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. தினமே கம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நூற் றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் கலந்து  கொண்டனர். இதில் செவித்திறன் குறைபாடு,கண் பார்வை யற்றோர், வாய் பேச இயலாதோர், கடுமையாக உடல் மற்றும்  கால்கள் பாதிக்கப்பட்டோர்,என பல்வேறு பிரிவினர்கள் ஆர் வமுடன் கலந்து கொண்டனர். இதில், ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல்,  குண்டு எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகள்  நடைபெற்றது. இந்த அனைத்து போட்டிகளிலும் நாங்களும்  சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அசத்தலாக விளையாடினர். இதுகுறித்து, அறக்கட்டளையின் நிறுவனரும், மாற்றுத்தி றனாளியான மணிகண்டன் கூறுகையில், தங்களால் எதுவும்  செய்ய முடியாது என்ற மாற்றுத்திறனாளிகளின் மன நிலையை போக்கும் விதமாகவும்,அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இது போன்ற போட்டிகளை நடத்துவதாக தெரிவித்தார்.