districts

img

முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் ஆணையக் கூட்டம்

கோவை, டிச. 28:  கோவையில் தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தின் மாநில இயக் குநரின் ஆய்வுக் கூட்டம் உரிய முன்னறி விப்பின்றி நடத்தப்பட்டதாக, தாழ்த்தப் பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதி கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  மாவட்ட அளவிலான வன்கொ டுமை தடுப்பு சட்ட நிலுவை வழக்குகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடை பெற்றது. இதில் தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணைய மாநில இயக்குநர் எஸ்.ரவிவர்மன் பங்கேற்றார். கூட்டத் தில், மாவட்ட வருவாய் அலுவலர்  மோ.ஷர்மிளா, காவல் கண்காணிப்பா ளர் வி.பத்ரிநாராயணன் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த  இயக்குநரிடம் மனு அளிப்பதற்காக தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், துப்புரவுத் தொழிலா ளர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். கூட்டம் தொடங்கும்  முன்னதாக அரங்கில் அமர்ந்தி ருந்த மனுதாரர்கள் வெளியே அனுப் பப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற் காக நாற்காலியில் அமர்ந்திருந்த வர்களை வெளியே செல்லும்படியும், கூட்டத்தில் வைத்து இயக்குநரிடம் மனு  அளிக்கக் கூடாது என்றும் அதிகாரி கள் தங்களை வெளியேற்றியதாகவும் அருந்ததியர் இட ஒதுக்கீடு பாது காப்பு சங்கத்தின் மாநில ஒருங்கி ணைப்பாளர் கோவை தென்ன ரசு குற்றஞ்சாட்டி யுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,செட்டிப்பா ளையம் ஓராட்டுக்குப்பையில் 23  ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டாவுக் காக காத்திருக்கும் மக்களை அதிகா ரிகள் ஏமாற்றுவது குறித்தும், செட்டிப் பாளையம் பாரதி நகர், கலைஞர் நகர், ஒத்தக்கால்மண்டபம் பகுதிகளில் ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டா இடத் தில் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது, வெள்ளலூரில் ஏற்கெனவே தேர்வான  முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்க ளுக்கு பட்டா வழங்காமல் வேறு நபர் களுக்கு வழங்க அதிகாரிகள் முயற்சிப் பது குறித்தும் புகார் அளிக்க வந்துள் ளேன். இதேபோல், தேக்கம்பட்டி யில் பட்டா பெற்றவர்களுக்கு இடத்தை  அளந்து கொடுக்கக் கோரி ஆதித்தமி ழர் கட்சியினரும், அம்பேத்கர் சிலை வைக்க மாநகராட்சி அனுமதி மறுப்பது  குறித்து பன்னீர்செல்வம் என்பவரும்,  ஊதிய விவகாரம் தொடர்பாக மாநக ராட்சி தூய்மைப் பணியாளர்கள் மனு  அளிக்க வந்திருந்தனர்.

இவர்களில் சிலர் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அவர்களை வெளியே செல்லும்படி அதிகாரிகள் கூறிவிட்டனர். அதேபோல், அரங்கில்  வைத்து இயக்குநரிடம் மனு அளிக் கக் கூடாது தனியாக சென்று கொடுத் துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்ட னர். இதுபோன்ற செயல்களை  அதிகாரிகளின் நவீன தீண்டாமை யாகவே நாங்கள் கருதுகிறோம்.  மேலும் இயக்குநர் ஆய்வுக்காக வரு வதை முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் கூட்டம் ரகசிய மாக நடத்தப்படுகிறது. வேறு நபர்க ளின் மூலம் தகவல் அறிந்து நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம் என்றார்.  கீரணத்தம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் சுகாதார சீர்கேடு நிலவு வது குறித்து இயக்குநரிடம் புகார்  அளிக்க வந்திருந்த கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரவை யின் நிறுவனர் ப.இளங்கோவன் கூறும்போது, இயக்குநரின் வருகை குறித்து முன்கூட்டியே பொது அறிவிப்பு  கொடுத்திருந்தால், மாவட்டம் முழுவ தும் இருந்து பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டவர்கள் வந்து தங்களின்  கோரிக்கை மனுக்களை கொடுத்தி ருக்க முடியும். ஆனால் இது குறித்து அதிகாரிகள் எந்தத் தகவலையும் தெரி விக்க மறுத்துவிட்டனர். மேலும், மனுதாரர்களிடம் இருந்து கோரிக்கை  மனுக்களைப் பெறுவதிலும் அலட்சி யம் காட்டியது கண்டிக்கத்தக்கது என்றார்.