கோடை வெயில் சுட்டெரிக்கும் போது மனசுக்குள் குடை பிடித் ததைப் போன்ற இதமான உணர்வை தருவது அந்த ஒற்றைச் சொல் மட்டும் தான். அந்தச் சொல்லின் பெயர் ‘ஊட்டி’. ‘ஊட்டி’ என்ற இந்தப் பெயரை நினைக்கும் போதே மனதை சில்லிட வைக்கும். அத்தனை இத மான தட்பவெப்பத்தை இது தனித்துவ மாக கொண்டு சிறக்கிறது. வருடத்தின் ஒவ்வொரு நாளும் இங்கு வசந்த காலமே நிலவுவதால் அனைவருக்கு மான கோடைக்கால சொர்க்கம் ’ஊட்டி’ மட்டும் தான். ஆச்சர்யத்தில் விழி மிரளவைக் கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கம்பீரம், பொங்கிப் பெருகி பால் போல பாய்ந்தோடும் அருவிகள், லட்ச லட் சமாக குடைகள் பிடித்திருக்கும் பசிய வனங்கள், பறவைகளின் திகட்டாத சேர்ந்திசை, பூச்சிகளின் இடைவிடாத ரீங்காரம், திகைக்க வைக்கும் கொண்டை ஊசி வளைவுகள், சாலை யைக் கடந்து கனிவாக காட்சித் தரும் விலங்குகள், பனித்துளி சுமக்கும் மரகத புல்வெளிகள், தேன்துளி பரு கிய மலர்வனங்கள், ஈரம் கலந்து தழு வும் இதமான காற்று, துன்புறுத்தாத மெல்லிய வெயில், எத்தனை எத் தனை காட்சிகளை ‘ ஊட்டி’ என்ற ஒற்றைச் சொல் வரைந்து வரைந்து தரு கிறது. ஆம் அழகியலின் உச்சம் தொட்ட குறிஞ்சி நிலம் தான் ‘ ஊட்டி’. வருடந்தோறும் மலைகளின் அரசி யாக இருந்து, வருடத்தில் மே மாதம் மட்டும் மலர்களின் அரசியாக மாறும் பிரபஞ்ச பேரழகிதான் ‘ ஊட்டி’ உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு வரும் தங்கள் வாழ்நாளில் நேரில் வந்து பார்த்து ரசிக்கத் துடிக்கிற உன்ன தமான இடமாக இது மாறி இருக்கி றது. வெள்ளைக்காரர்கள் கோடை வாசஸ்தலத்தை உலகெங்கிலும் தேடி இறுதியில் கண்டடைந்த இடம்தான் ‘ஊட்டி’. இங்கு மெளனம் நிரம்பி வழி கிறது, அழகும் ததும்பிப் பெருகு கிறது. மாசுபடாத காற்றும் மனம் குளிர்த்திப் போகிறது. வானவில்லை உதிர்த்துப் போட்டதைப் போல மலர் கள் பரவிக் கிடக்கிறது. இப்படியான ஐப்புலனின்பத்தைப் பெறும் ஒரே இடம் உதகை. மே மாதம் திருவிழா கோலம் பூண்டு, அதன் கோலாகல இன்பத்தில் நம்மை மூழ்கடிக்கும் அழகிய நிலமகள்.
மதுரை தூங்காத நகரமென்றால், உதகை தூங்கும் நகரம். மாலை இருட் டுவதற்கு முன்னதாகவே ஊரடங்கி இரவைப் போர்த்தி உறங்கச் சென்று விடும். சூரியன் வந்து ஈரப்பனியா டையை விலக்கிய பிறகுதான் கண் களைக் கசக்கிக் கொண்டு எழுந்தி ருக்கும். முகம் மட்டும் தெரியும் படி யாக விட்டுவிட்டு உடம்பின் எல்லா பாகங்களையும் உஷ்ண ஆடை களைக் கொண்டு ஒளித்துவைப்பது இங்கு வழக்கும். காளான் முளைத் திருப்பதைப் போல எல்லோருடைய தலையின் மீதும் குடை மலர்ந்திருக் கும். தென் மாநிலப் பயணிகள் அதிகம் வந்து போகும் இந்த சுற்றுலா தலம், இப்போதெல்லாம் வட இந்தியர் களாலும், மேலை நாட்டுக்காரர்களா லும் அதிகம் புழங்கப்படுகிறது. இரண்டு வரிகளில் உலோகக் கவி தைகள் எழுதியதைப் போல் காட்சித் தரும் ரயில் தண்டவாளங்கள் ஆச்சர் யத்தின் உச்சம். தென்றல் தொட்டு விளையாட, பூக்கள் கண்சிமிட்ட அழ கியலோடு ஆடி அசைந்து ஊர்ந்து போகும் தொடர்வண்டி பயணங்கள் அலாதியானவை. மேலிருந்து பார்த் தால் உச்சந்தலையில் வகிடு எடுத்தாற் போன்று காட்சியளிக்கும் தார்ச்சாலை கள், கற்களால் எழுதிய அழகிய கல்வெட்டுக்களாய் காட்சியளிக்கின் றன.
வருடம் முழுவதும் ஓடிக் கொண்டே இருப்பவர்களுக்கு சுற்று லாவானது மிகப் பெரிய இளைப்பாற லைக் கொடுக்கவே செய்கிறது. பய ணங்கள் உண்மையில் மனிதர்களைப் பக்குவப்படுத்துகின்றன. புதிய பிர தேசங்கள், புதிய மனிதர்கள், புதிய பருவநிலை முதலான இனிய அனுபவங்கள் சுற்றுலா செல்வதின் மூலம் தான் எல்லோருக்கும் கிடைக் கின்றன. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் துய்க்கலாம் என்றால் அது உதகையில் மட்டும் தான். வானத் திலிருந்து வரும் எந்த தேவதையின் வருகைக்காக இந்த பச்சைக்கம்பள விரிப்பு என்று சொல்லும் அளவிற்கு திசையெங்கும் தேயிலைத் தோட் டங்களின் நீட்சி. மாலை நேரத்தின் மின்னொளி விளக்குகளின் வர்ண ஜாலங்கள் கண்களுக்கு நல்ல விருந்து. வானம் நட்சத்திரங்களை தவ றவிட்டு விட்டதோ என்று எண்ணும் அளவிற்கு விளக்குகளின் மிளிரல்கள். மே மாதம் முழுவதும் சுற்றுலா பயணி களின் வெள்ளம் நிறைந்து வழிந்து கொண்டே இருக்கும். டிக்கேசன் மணக்கும் தேனீரகங் கள். மசாலா வாசனைத் தூக்கும் உணவகங்கள், வீட்டுத் தயாரிப்பில் விதவிதமாய் புன்னகைக்கும் சாக் லைட் கடைகள், வாடாத பூக்களால் கண்சிமிட்டும் பொக்கே சாப்புகள், இப்படி எல்லா அங்காடிகளும் கரன்சி களால் கல்லாகட்டும் பொற்காலம் தான் இந்த மே மாசம். உதகைக் குள் நுழைந்ததும் சேரிங்கிராஸின் வர வேற்பு மனதைத் துள்ளவைக்கும். கடந்ததும் வடமேற்குச் சாலை காந்தம் போல இழுக்கும். பெரும் பரப்பிலான மரகத புல்வெளியெங்கும் பல வண்ணங்களில் பூத்துச் சிரிக் கும் தாவரவியல் பூங்கா காண்போரை கண்சிமிட்டி வரவேற்கும். பூக்கள் இயற்கை எழுதிய அழகிய கையெ ழுத்து என்று புனைந்துரைப்பார்கள் . இங்கு வந்து பாருங்கள் எத்தனை அழகிய கையெழுத்துக்கள், எத் தனை எத்தனை நிறங்களில். தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம் தான் தொட்டபெட்டா! இதன் உச் சியில் நின்றால் உதகையின் மொத்த அழகையும் 360 டிகிரி கோணத்தில் பார்த்து பரவசத்துடன் ரசிக்கலாம்.ஆவி பறக்கும் சோளம், வறுத்ததால் முகம் சிவந்த வேர்கடலை பசியின் துடிப்பை அதிகப்படுத்திவிடுகின்றன. கண்ணாடி கோப்பையில் பரவும் சூட்டை உள்ளங்கையில் பரவவிட்ட படி பருகும் அனுபவம் அடடா! அடடா!
சாரை சாரையாய் அணிவகுத்த படி வாகனங்கள் நின்றிருக்கும் மத்திய பேருந்து நிலையம். அதைக் கடந்து சென்றால் குழந்தைகள் பூங்கா. பெயருக்குத்தான் அது குழந்தை கள் பூங்கா, உண்மையில் அங்கு பெரியவர்களும் குழந்தைகள் ஆகி மகிழ்வதை கண்டு ரசிக்கலாம். அதில் களித்து மீண்டால் படகு இல்லம். ஆழமான அகலமான சில்லென்ற ஏரி. ஏரிக்கு ஆடை உடுத்தியதைப் போன்று கரையெங்கும் படகுகள். இக்கரைக்கும் அக்கரைக்கும் ஊர்ந்து களைத்த படகுகளை தாலாட்டும் நீர லைகள். சைக்கிள் மிதிப்பதைப் போன்று கால் துடுப்பு படகுகள். நீரில் அலைக் கவிதைகளை பலமுறை எழுதி எழுதிப் பார்க்கும் கைத்துடுப்புகள். மிதவை களின் மீது ஊர்ந்து போகும் சவாரி எல்லோருக்கும் பிடித்தமானது. ஏழு வண்ணங்களில் ரோஜாப் பூக்கள், கருப்பு வண்ணத்திலும் ஒரு ரோஜா வகையை நகரின் மத்தியில் அமைந்திருக்கும் ரோஜா பூங்காவில் காணலாம். வருடத்தில் பல லட்ச சுற் றுலா பயணிகளின் காலடி பட்டு கண்ண டியும் படும் இந்த உதகை நகரம் மே மாதம் மட்டும் பலகோடி அந்நிய செலா வணியை ஈட்டித்தருகிற கோடைகால வருவாய் மாவட்டமாக திகழ்கிறது. வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணி யும் அழகியலை ஆராதிக்கும் கலார சனை மிக்கவர்களாக மட்டுமே இருப் பது போதாது ஆசியாவின் உயிர்ச் சூழல் மண்டலமாக இருக்கும் இந்த பிரதேசத்தின் சூழலியலை காக்கும் காவலர்களாக இருக்க வேண்டும் என் பதே இயற்கை மக்களுக்கு விடுக்கும் இனிய விண்ணப்பம் ஆகும்.
முனைவர். போ.மணிவண்ணன்