districts

img

ஆமை வேகத்தில் உடுமலை பேருந்து நிலைய விரிவாக்கப்பணிகள்

உடுமலை, ஜூன் 30- ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் உடுமலை பேருந்து நிலைய விரி வாக்கப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை மத்திய பேருந்து நிலையம், நகரின் மையப்பகுதியில் கோவை – திண்டுக்கல் தேசிய நெடுச்சாலையில் அமைந்துள் ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பின்னர் 1996 ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப் பட்டது. தற்பொழுது பயணிகள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், பேருந்து நிலை யத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடுமலை பேருந்து நிலை யத்திற்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும், அண்டை மாநிலமான மூணாறு, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின் றன. உடுமலை நகர பகுதியிலுள்ள பள்ளி, கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள், திருப்பூர் மற்றும் கோவைக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வாரந்தோறும் திங்களன்று நடைபெறும் வாரச்சந்தைக்கு வருபவர்கள் என எப்பொழுதும் இந்த பேருந்து நிலையத் தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிக மாகவே காணப்படும். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2001 ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய, வி.பி.புரம் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் பேருந்துநி லைய விரிவாக்க வேலைகள் நடை பெற்று வருகிறது. இருந்தும் தற்பொ ழுது வரை முடிவுக்கு வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், பேருந்து நிலைய விரிவாக்கப்பணிகள் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், தற்போது வரை முடிவுக்கு வராமல் இருப்பது வேதனையாக உள்ளது. மேலும், பயணிகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி பெயர் அளவில் மட்டுமே உள்ளது. அனைவரும் பயன் படும் வகையில் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். அதேபோல் முறையாக பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்தாமல் இருப்பதால், அனைத்து இடங்க ளும் குப்பை மேடு போன்று காட்சிய ளிக்கிறது. எனவே, நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாகும், என்றனர்.