தாராபுரம், பிப். 10- தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பேரூ ராட்சிக்குட்பட்ட கொட்டமுத்தாம்பாளையததை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் ரஞ்சித் (23) தேங்காய் களத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவருடன் பணிபுரியும் 21 வயதுள்ள வடமாநில தொழிலாளருடன் இருசக்கரகில் வாகனத்தில் திருப்பூர் - தாராபுரம் நெடுஞ்சா லையில் கொட்டமுத்தாம்பாளையம் சென்று கொண்டிருந் தார். அப்போது நஞ்சியம்பாளையம் பாலம் அருகே எதிர்பா ராதவிதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது. இதில், ரஞ்சித் மற்றும் வடமாநில இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலின் பேரில் வந்த தாராபுரம் போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.