பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் இரு நாட்கள் திருப்பூர் பொங்கல் திருவிழா திருப்பூர், ஜன.13- தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்து டன் இணைந்து நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில் தமிழர் திருநாள் - 2025 திருப்பூர் பொங்கல் திரு விழா புதன், வியாழன் என இரு நாட்கள் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் நொய்யல் கரையில் நடை பெறுகிறது. திருப்பூரில் உழவையும், உழவர் பெருமக்களின் சிறப்பையும் உணர்த்தும் பொங்கல் திருவிழாவை கடந்த சில ஆண்டுகளாக நொய்யல் பண்பாட்டு அமைப்பு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல அமைப்புகளுடன் இணைந்து மக்கள் திருவிழா வாக நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை நொய்யல் கரையில் யுனிவர்சல் தியேட்டர் எதிரில் உள்ள மைதானத்தில் ஜனவரி 15, 16 ஆகிய இரு நாட்கள் நடத்துகின்றனர். இந்த விழாவுக்காக பிரம்மாண்டமான மேடை நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கும் பணி திங்களன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தலைமையில், தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் விழா பேருரை ஆற்றுகின்றனர். திருப்பூர் எம்.பி. கே.சுப்பரா யன், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் ந.தினேஷ் குமார், புலம்பெயர் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்தி கேய சிவசேனாபதி, மாநகராட்சி ஆணையர் எஸ்.ராம மூர்த்தி உள்பட முக்கிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். புதன்கிழமை மாலை சமத்துவப் பொங்கல் வைத்து மக்களிசைப் பாடல்கள் பாடப்படுகிறது. திண்டுக்கல் சக்தி கலைக்குழு பறையிசை, கவிநயா நாட்டியக் குழுவின் பரதநாட்டியம் நடைபெறும். பத்மஸ்ரீ விருது பெற்ற பத்தரப்பனுக்கு பாராட்டி சிறப்பு செய்யப்படுகி றார். கின்னஸ் சாதனையாளர் டிரம்ஸ் சலோமி மற்றும் வி2பி குழுவினரின் போட்டியிசையும் நிறைவாக விஜய் டிவி புகழ், மூக்குத்தி முருகன், கலைவாணி பங்குபெறும் விஷால் பாபுவின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெறு கிறது. இரண்டாம் நாள் வியாழனன்று மாலை திருப்பூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சிலம்பாட்டமும், நிமிர்வு குழுவினரின் பறையிசையும், திருவாரூர் அருள் காவடியாட்டம், கங்கை கருங்குயில்கள் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, ஈரோடு நாடகக் கொட்டகை குழுவின ரின் நாடகம், புதுகை பூபாளம் நையாண்டி நிகழ்ச்சி, கேரளா பிரம்மா கலைக்குழு நடனம் மற்றும் மிஸ்டர் பிளாக் பல்சுவை நிகழ்ச்சி நடைபெறும். நொய்யல் பண் பாட்டு அமைப்பின் தலைவர் அரிமா மு.ஜீவானந்தம் நன்றி கூறுகிறார். தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பைப் பறை சாற்றும் விதத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் திருவிழாவில், திருப்பூர் மாநகர மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்டுகளிக்கும் படி நொய்யல் பண்பாட்டு அமைப்பின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.