districts

img

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து கல்லூரி மாணவர்கள் இருவர் பலி; 34 பேர் காயம்

திருப்பூர், பிப்.6 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே கோவை  சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனி யார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. இதில் பெரியசாமி, ஹரி ஆகிய  கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக  பலியாகினர். மேலும் 30க்கும் மேற்பட் டோர் காயங்களுடன் பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். வியாழனன்று திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனி யார் பேருந்து புறப்பட்டு, ஈரோடு நோக் கிச் சென்றது. இப்பேருந்தை  மாட சாமி என்பவர் ஓட்டிச் சென்றார். இப் பேருந்து பெருமாநல்லூர் அடுத்த பல் லகவுண்டம்பாளையம் சாம்ராஜ் பாளையம் பிரிவைக் கடக்கும்போது, முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல  ஓட்டுநர் முயன்றார். அப்போது ஓட்டுந ரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை யோரம் இருந்த சிறிய பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.  இந்த விபத்தில் ஈரோடு தனியார் கல்லூரியில் பி.காம் (சிஎஸ்) முதலாம் ஆண்டு பயிலும் செங்கப்பள்ளி அருகே விருமாண்டம்பாளையம் பகு தியைச் சேர்ந்த  பெரியசாமி (19),  அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு  பி.எஸ்.சி (சிஎஸ்) பயிலும் சுண்டக்காம் பாளையம் பகுதியை சேர்ந்த  ஹரி கிருஷ்ணன் (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த ஊத்துக்குளி போலீசார்  மற்றும் தீயணைப்பு துறையினர், விபத்தில் சிக் கியவர்களை மீட்கும் பணியில் ஈடு பட்டனர். தொடர்ந்து கிரேன் மூலம் பள் ளத்தில் கவிழ்ந்த பேருந்து மீட்கப் பட்டது. இந்த  விபத்தில் காயமடைந்த  மேலும் 34 பேர் பெருந்துறை அரசு  மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்து வமனை மற்றும் பல்லகவுண்டம் பாளையம் பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., யாதவ் கிரிஸ்  அசோக் சம்பவ இடத்தை நேரில் பார் வையிட்டு மீட்புப் பணிகளைத் துரிதப் படுத்தினார். ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயக்கப்ப டும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என அவர் கூறினார். சம்பவ இடத்தில் திருப்பூர் வரு வாய் கோட்டாட்சியர், ஊத்துக்குளி வட் டாட்சியர் ஆகியோர் ஆய்வு செய்து காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறு வதை உறுதி செய்தனர். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களை பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் சந்தித்து ஆறுதல்  கூறினார். விபத்து குறித்து செய்தியறிந்து  வாலிபர் சங்கத்தினர் அங்கு விரைந்து சென்று ரத்ததானம் செய்தனர்.