districts

img

இரு கார்கள் தீ வைத்து எரிப்பு?

கோவை, செப்.2- கோவையில் இரு கார்கள் தீ பிடித்து  எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோவை, ரத்தினபுரியில் நேரு வீதி பள்ளி  அருகே அப்பகுதியை சேர்ந்த இருவர், தங்களது கார்களை சம்பவத்தன்று நிறுத்தி யிருந்தனர். நள்ளிரவில் இரு கார்களுக்கும் தீ பிடித்து எரிந்துள்ளது. இதையறிந்த, அப் பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும்  ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித் தனர். உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால்  அதற்குள் ஒரு கார் முற்றிலும் தீயில் எரிந்து  நாசமானது. மற்றொரு கார் முன் பகுதி மட்டும் எரிந்தது. இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை யில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள  கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து  வருகின்றனர்.