கோவை, டிச.24- கோவையில் தாயை பிரிந்த குட்டி யானையை மீண் டும் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை யினர் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாவட்டம், ஆனைகட்டி மற்றும் மருத மலை, தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் தற்போது ஏராளமான காட்டு யானைகளின் நடமாட்டம் காணப் படுகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானை களின் இடப்பெயர்வு காலம் என்பதால் கேரளம் வனப் பகுதியில் இருந்து ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் வழியாக பவானி சாகர் அணை நீர் பிடிப்பு பகுதிக்கு சென்று அங்கிருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தெங்குமர ஹடா, முதுமலை, பந்திப்பூர் என யானைகள் வலசை செல்வது வழக்கம். இச்சமயங்களில் கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். கடந்த 20 நாட்க ளுக்கு மேலாக தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருத மலை வனப்பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரங்க ளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக் குள் நுழைந்து வருகின்றன. இந்நிலையில், திங்களன்று இரவு தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளி யேறி அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந் தது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். பின் னர் அங்கிருந்து வெளியே வந்தபோது தனியாக குட்டி யானை இருப்பதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி அந்த குட்டி யானையை வனப்பகுதியில் உள்ள கூட்டத்து டன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதே சமயம் அந்த குட்டியானை இருந்த இடத்திற்கு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தக வல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த வனப்பணி யாளர்கள் யானை உயிரிழந்ததை உறுதி செய்து அதிகா ரிகளுக்கு தகவல் அளித்தனர். கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் உதவி வனப்பாது காவலர் விஜயகுமார் மற்றும் வனக் கால்நடை மருத்து வர் சுகுமார் கோவை வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதகை இதேபோன்று, நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக 45க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் மற்றும் விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் CT 16 புல்லட் ராஜா என்ற காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனைத் தொடர்ந்து, காட்டு யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க கடந்த 6 நாட்களுக்கும் மேலாக 75க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் நான்கு குழுக்க ளாக பிரிந்து ட்ரோன் கேமராக்களை கொண்டு யானை யின் நடமாட்டத்தை கண்காணித்தும் கும்கி யானை களை கொண்டு விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில், சேரங்கோடு பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் செவ்வாயன்று கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதி யில் யானை இருப்பதை ட்ரோன் கேமரா மூலம் வனத் துறையினர் கண்டு பிடித்தனர். ட்ரோன் கேமராவை கண்ட அந்த காட்டு யானை புதருக்குள் தன்னை மறைத்து கொண்ட நிலையில், தொடர்ந்து வனத்துறையினர் தீவிர மாக யானையை கண்காணித்து, ஊருக்குள் நுழையா மல் இருக்க கும்கி யானையை கொண்டு விரட்டும் பணி யிலும் ஈடுபட்டுள்ளனர்.