அமெரிக்க குடியரசு தலைவர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பதால், அமெ ரிக்காவுக்கு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்கும் என்று இங் குள்ள சில ஏற்றுமதியாளர்கள் நம் பிக்கை தெரிவித்துள்ளனர். சீனாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவிற்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து வருவ தால், சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு முயன்று வருகி றது. நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், குடி யரசுக் கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்ப், “வல்லமை மிக்க அமெ ரிக்காவை உருவாக்குவோம்!” என்ற முழக்கத்துடன், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகமான இறக் குமதி வரி விதிப்போம், சீனப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிப் போம் என்றும் பிரச்சாரம் செய்தார். இதனால் அமெரிக்காவுக்கு, சீனாவின் பின்னலாடை ஏற்றுமதி குறையும், அதைப் பயன்படுத்தி திருப்பூர் பின்னலாடை ஏற்றும தியை அதிகரிக்க முடியும் என்று இங்குள்ள சில ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர். சீனா மட்டுமின்றி எந்த ஒரு நாட்டினுடைய ஏற்றுமதி பாதிக்கப் பட்டாலும், அது தன்னியல்பாக இந்தியாவுக்கு வந்துவிடும், அத னால் இந்தியா பலனடையும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சர்வதேச சந்தையில் மலிவு விலை யில் பொருட்களை கொடுப்பவர் களே அதிக வாய்ப்பை பெற முடி கிறது. அந்த வகையில், அமெரிக்க சந் தையில் வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் போட்டியி டுகின்றன. குறுகிய காலத்தில் இந்த நாடுகளின் ஏற்றுமதி கணிச மாக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக வங்கதேச ஏற்றுமதி இந்தியாவை விட அதிகரித்திருக்கிறது. தரமான ஆடையை குறைந்த விலையில் விற்பனை செய்பவர்கள் கூடுதல் வாய்ப்பை பெற முடியும். ஆகையால், சீனாவுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்தால், அது இந்தியாவுக்கு பலன் கிடைக்கும் என்று நம்ப முடியாது. மாறாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் சர்வதேச சந்தையில் போட்டி யிட்டு குறைந்த விலையில் கொடுத்தால்தான் வாய்ப்பை கைப் பற்ற முடியும். பின்னலாடை உற்பத்தி மட்டு மின்றி அனைத்து பொருட்களின் உற்பத்திச் செலவு என்பது இந்தி யாவில் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியாளர்களும் அதன் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்திய அரசு, சர்வதேச சந்தை யின் வளர்ச்சி போக்கை கவனித்து, இங்குள்ள தொழில்துறையினருக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே, குறிப்பாக ஜவுளி மூலப்பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை குறைப்பு, எளிய வர்த்தக நடைமுறை ஆகிய வற்றில் கவனம் செலுத்தினால் தான் ஏற்றுமதியாளர்கள் பயனடைய முடியும். மேலும், டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவரது நடவடிக்கைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண் டும். குறிப்பாக, அமெரிக்க பொரு ளாதாரமும் பணவீக்கம், விலை வாசி உயர்வு என கடும் நெருக்கடி யில் சிக்கி இருக்கும் நிலையில் அதை மீட்பதற்கு கடுமையான நட வடிக்கைகள் எடுக்கப் போவதாக டிரம்ப் கூறியிருக்கிறார். அவர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்து தான் அது இந்திய ஏற்றுமதிக்கு குறிப் பாக பின்னலாடை ஏற்றுமதிக்கு உதவுமா? என்று பார்க்க முடியும். மற்றொருபுறம், அமெரிக்காவின் வர்த்தகத் தடுப்பு நடவடிக்கைகளை எதிர் கொள்ள, சீனா தனது உள் நாட்டு சந்தையை பலப்படுத்தி வரு கிறது. அதுபோல் இந்தியாவிலும் உள்நாட்டு சந்தையை பலப்படுத்து வது தான் பின்னலாடை துறை மட் டுமின்றி ஒட்டுமொத்த ஜவுளித்து றைக்கும் நிரந்தரமான வளர்ச்சிக்கு உதவி செய்யும். (வே.தூயவன்)