districts

img

‘வயநாட்டில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி’

கேரள மாநிலம், வயநாட்டில் செவ்வாயன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, தலைவர் ஆர்.வைரமணி, பொருளாளர் பெருமா, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி ஆகியோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.