கோவை, ஜூலை 26- ஆனைகட்டி மலைப்பகுதியில் உள்ள தனியார் மதுபானத்கூடத்தால், கடந்த 3 மாதங்களில் 196 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உடனடியாக அந்த மதுபான கூடத்தை அகற்ற வேண்டும் என வலியு றுத்தி பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம், ஆனைகட்டி மலைப்பகுதி யில் உள்ள தனியார் மதுபானக்கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளி யன்று மனு அளித்தனர். அங்கு ‘பிரண்ட்ஸ்’ என் கின்ற பெயரில் தனியார் கிளப் இயங்கி வருவதாக வும், அங்கு மது அருந்தி தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் முருகவேலு கூறுகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய போராட்டத் திற்கு பிறகு ஆனைகட்டியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. அந்த சமயத்தில் மாவட்ட நிர்வாகத்தினர், 23 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் இந்த கடை நிறுவப்படும் என்று உறுதியளித்தனர். தற்போது ஆனைகட்டி பகுதியில் தனியார் கிளப் துவக்கப்பட்டுள்ளது. அங்கு விற்பனை செய்யப் படும் மதுபானங்களை அருந்தி, கடந்த மூன்று மாதங்களில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 196 பேர் உயிரிழந்துள்ளனர். எங்கள் பகுதியில் உள்ள தனியார் பாரை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், பழங்குடியின சமூகத்தினரை மது பழக் கத்திற்கு அடிமையாக்கி, அவர்களது நிலங்களை அபகரிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அரசு நிர்வாகத்தினர் ஒத்து ழைப்பு அளித்து, பழங்குடியின மக்களின் நிலங் களை, வாங்குவோ விற்கவோக்கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி எங் கள் பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக்கடை களில், பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படு வதில்லை. தற்போது வழங்கப்படும் பொருட்க ளால் பலர் உடல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி வரு கின்றனர். நான்காண்டுகளாக இந்த பிரச்சனைகள் குறித்து மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை, என முருகவேலு குற்றஞ்சாட்டியுள்ளார்.