உதகை, ஏப்.19- நீலகிரி தொகுதியில் விறுவிறுப் பான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோத்தர் பழங்குடியின பெண்கள் பாரம் பரிய உடை அணிந்து நீண்ட வரிசை யில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்த னர். இந்தியாவில் 7 கட்டங்களாகவும், தமிழகத்தில் ஒரே கட்டமாகவும் நாடா ளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள தாக கடந்த மாதம் 16 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 16 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஒரு புறம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த 17 ஆம் தேதியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. இதேபோல் மற்றொருபுறம் வாக்கு சாவடி அமைத்தல், வாக்குப்பதிவு எந்தி ரங்களை தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டம் நிர்வாகம் செய்து வந்தது. இதன்படி உதகை, குன்னூர், கூடலூர், பவானிசாகர், அவிநாசி, மேட்டுப்பா ளையம் சட்டமன்ற தொகுதிகள் அடங் கிய நீலகிரி தொகுதியில் 1619 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. நீலகிரி தொகுதியில் 14,28,252 வாக்கா ளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு நாட் களாக ஏற்கனவே கணினி மூலம் சீரற்ற மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் காவல் துறை பாதுகாப்புடன் அந்தந்த வாக் குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க தேவை யான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் வெள்ளியன்று காலை 7 மணி முதல் நீலகிரி தொகு தியில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில கிராமங்களில் வாக்களித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என் பதால் அதிகாலை முதலே வந்து குளி ரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரி சையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். மேலும் நகர்ப்புறங்கள் மட்டு மல்லாமல் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வத் துடன் வாக்களித்து வரூகின்றனர். இதனை அடுத்த உதகை மேரீஸ் ஹில் பகுதியில் உள்ள சூசையப்பர் கல்வியியல் கல்லூரி உள்ள வாக்குச் சாவடி மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணா தனது வாக்கினை செலுத்தி னர். இதை போல உதகை அருகே உள்ள கோக்கால் மற்றும் கிராமத்தில் கோத்தர் பழங்குடியினர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரம்ப ரிய உடை அணிந்து தங்களது ஜனநா யக கடமையை ஆற்றினர். மேலும் தோடர், காட்டுநாயக்கர், இருளர், குரும் பர், பனியர் ஆகிய பழங்குடியின மக்க ளும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் ஆர்வமுடன் வந்து வாக்குயளித்தனர். இதேபோல் சோலூர் பகுதியில் படுக சமுதாய மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்க ளுக்கு தேவையான பந்தல், குடிநீர், சாய்வு தளம், சக்கர நாற்காலி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் 806 பகுதிகளில் உள்ள 1619 வாக்குச்சாவடிகளில் 176 வாக்கு சாவடிகள் பதற்றமானதாக கண் டறியப்பட்ட அங்கு நுண் பார்வையா ளர்கள் நியமிக்கப்பட்டு இணைய வழி கண்காணிப்பு கேமரா மூலம் கண்கா ணிக்கப்பட்டது. இதேபோல் மகளிர் மற்றும் மாதிரி வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு சிறப்பான ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தது. இதை பார்த்த வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந் தனர். ஒரு சில இடங்களில் வனப்பகு தியை ஒட்டிய தேயிலைத் தோட்டம் மற் றும் வனப்பகுதியை ஒட்டிய வாக்குச்சா வடி மையங்களில் பொதுமக்கள் வாக னங்களில் வந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் வழக்கத்தை விட இளம் தலைமுறையை சேர்ந்த முதல் வாக்காளர்கள் மிக ஆர்வமுடன் வந்து வாக்குயளித்தனர். ஒரு சில பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகள் உறவினர் துணையுடன் வந்து வாக்க ளித்தனர்.