districts

img

அலட்சியம் காட்டும் வருவாய்த்துறை: பழங்குடியின மக்கள் அவதி!

தருமபுரி, ஆக.26- அரூர் வட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பட்டியல், பழங்குடியின மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்கள் வீட்டுமனைப்பட்டா  கேட்டுமனு அளித்தும், வருவாய்த் துறையினர் அலட்சியம் காட்டி வருவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், மாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இட்லப்பட்டி கிராமத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த போயர் இன மக்கள் வசித்து  வருகின்றனர். கல் உடைத்தல், கிணறு வெட்டுவதல், வயல்க ளுக்கு வரப்பு கட்டும் பணி செய்து,  அதில் கிடைக்கும் சொற்ப வரு வாயில் வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். இதனிடையே, 1937 ஆம்  ஆண்டில் ஒட்டச்சென்னன் மகன் மொட்டைய போயன் என்பவரது பெயரில், 15/1இல் 97 சென்ட் நிலம்  இருந்தது. இவர் இந்த இடத்தில் தனது உறவினர்களான 25  பேருக்கு வீடு கட்ட இடமளித்து, இடலப்பட்டி என்ற கிராமத்தை உரு வாக்கினார். இக்கிராமத்தின் அருகே உள்ள சாதி ஆதிக்க சமூ கத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், 1962 ஆம் ஆண்டு மொட் டைய போயனிடம் அந்த நிலத்தை விலைக்கு வாங்கியதாக போலி பத்திரம் தயார் செய்துள்ளார். சாதி ஆதிக்கவாதிகள் மிரட்டல் இந்நிலையில், இட்லப்பட்டி கிராமத்தில் நூறாண்டு காலமாக  வீடுகட்டி குடியிருந்து வரும் 25  குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். வருவாய்த் துறை வழங்கிய 9 பேருக்கான இல வச மனைப்பட்டாவுக்கான இடத்தை பயனாளிகளுக்கு அளந்து கொடுக்க வேண்டும். இக் கிராமத்திற்கு சுடுகாடு, ஒகேனக் கல் குடிநீர் வசதி செய்து தர வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலை மையில் அரூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு கடந்த ஜன.30 ஆம்  தேதியன்று இட்லப்பட்டி கிராம  மக்கள் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். 5 நாட்கள் நீடித்த  போராட்டத்தின் முடிவில், முதற் கட்டமாக ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட மனைப்பட்டாவுக்கான இடத்தை அதிகாரிகள் மீட்டனர். ஆனால், பட்டாவுக்கான இடத்தை  பயனாளிகளுக்கு அளந்து கொடுக் கவில்லை. மேலும், 25 குடும்பங்க ளுக்கு பட்டாவும் வழங்கவில்லை. மேலும், இக்கிராம மக்கள் சாதி  ஆதிக்க சக்திகளால் நாள்தோறும் மிரட்டலுக்குள்ளாகி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி இதுகுறித்து இட்லப்பட்டி ஊர் தலைவர் தங்கராஜ் கூறுகையில், சுமார் நூறு ஆண்டுகளுக்கும் முன்பு எங்கள் மூதாதையர் இந்த இடத்திற்கு வந்து இட்லப்பட்டி என்ற கிராமத்தை உருவாக்கினர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன் னர் மாம்பட்டி ஊராட்சி மூலம் குடி நீர் கிணறு வெட்டி கொடுத்தனர். வாணொலி, தொலைக்காட்சி அறை, மின்சார வசதி உள்ளிட் டவை செய்து கொடுத்துள்ளனர். எங்களுக்கு சொந்தமான இடத் தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், “நீங்கள்  குடியிருக்கும் இடம் எங்களது. நீங் கள் ஊரை காலி செய்ய வேண்டும்”  என மிரட்டி வருகிறார். நாங்கள் கட் டிய வீட்டை சீரமைத்தால் வெளி யாட்களை கொண்டு வந்து மிரட்டு கின்றனர். கழிப்பறை கூட கட்ட முடி யாததால், பெண்களுக்கு பாது காப்பு இல்லாத சூழல் உள்ளது.  தினந்தோறும் அச்சுறுத்தலுக்குள் ளாகி வருகிறோம், என்றார். விதொச சந்திப்பு அதேபோல் அரூர் வட்டம், மத் தியம்பட்டி ஊராட்சியில் மலைய டிவாரத்தில், சர்வே எண்:154/1இல் அரசு புறம்போக்கு இடத்தில் நீண்ட காலமாக குடிசை அமைத்து  வசித்து வருகின்றனர். பல ஆண்டு களாக மனைபட்டா கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித் தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதே ஊராட்சிக்குட் பட்ட கைலாயபுரம், சந்திராபுரத் திலுள்ள பழங்குடியின மக்களுக் கும், 1998 ஆம் ஆண்டில் வழங்கப் பட்ட மனைபட்டாவினை கிராம நத்த கணக்கிற்கு மாற்றியமைக்க வேண்டும் என தொடர்ந்து போராடி  வருகின்றனர். இந்நிலையில், வேடியப்பன் கோவில் இருளர் பகு திக்கு சென்ற அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து,  ஒன்றியச் செயலாளர் கே.குமரே சன், ஒன்றியப் பொருளாளர் வீரப் பன், ஒன்றியத் துணைத்தலைவர் எம்.தங்கராஜ் ஆகியோர், அப்ப குதி பொதுமக்களை சந்தித்து, கலந்துரையாடினர். இன்று காத்திருப்புப் போராட்டம் இந்நிலையில், செல்லம்பட்டி ஊராட்சி, கீளானூர் கிராமத்தில் உள்ள கல்லாங்குத்தல் புறம் போக்கு நிலத்தினை வகை மாற் றம் செய்து, ஆதிதிராவிடர், கொத்த னாம்பட்டி பழங்குடியின மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும். ஜடையம்பட்டியில் 117 பட்டியலின  குடும்பங்களுக்கு சர்வே எண்: 396, 397, 412 இல் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மனைப் பட்டாவுக்கான இடத்தை அளந்து கொடுக்க வேண்டும். சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் 100 ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு நிலப்பட்டா, மனைப் பட்டா வழங்க வேண்டும். பச்சி னம்பட்டி, வேடக்கட்டமடவு ஊராட்சி, அம்மாபேட்டை, அலங் குட்டை, சடையம்பட்டி ஆகிய கிரா மங்களில் வசித்து வரும் மிகவும்  பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டிய லின, பழங்குடி மக்களுக்கு மனைப் பட்டா மற்றும் அடிப்படை வசதி கள் செய்து தர வேண்டும் என வலி யுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்,  செவ்வாயன்று (இன்று) அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருப்புப் போராட்டம் நடை பெற உள்ளது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாநில பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாநில துணைத் தலைவர் ஜி.கணபதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.