districts

திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் சோதனை ஓட்டம்

திருப்பூர், நவ:19- திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் தற் போது சோதனை ஓட்டம் துவங்கி யுள்ளது. திருப்பூர் நகராட்சியாக இருந்த போது, 2007 ஆம் ஆண்டில் புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார் பில், எஸ்.பெரியபாளையம் பகுதி யில் 1.2 கோடி லிட்டர் திறன் கொண்ட  கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இது கடந்த 2009  ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில்  உள்ளது. இதில் 16 ஆயிரம் இணைப் புகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின் திருப்பூர் மாநகராட்சியாக தரம்  உயர்த்தப்பட்டு, வார்டு பகுதிகளும் அதிகரிக்கப்பட்டது. இதனால் பாதாள சாக்கடை பயன்பாடு அதிகரித்தது. அதனடிப்படையில் அம்ரூத் திட்டத் தில் 640 கோடி ரூபாய் மதிப்பில் இதற் கான பணி துவங்கியது. அவ்வகை யில் மங்கலம் சாலை, சின்னாண்டி பாளையம் பிரிவு மற்றும் எஸ்.பெரிய பாளையம் பகுதியில் கழிவுநீர் சுத்தி கரிப்பு மையங்கள் அமைக்கும் பணி துவங்கி முடிவடைந்துள்ளது. இதில் 10 மண்டலங்களாக இணைப்பு பகு திகள் திட்டமிடப்பட்டு 17 பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீர் 11 நீரேற்று  மையங்கள் வழியாக உந்தப்பட்டு இந்த மையங்களுக்கு கொண்டு செல் லப்படுகிறது. இரு மையங்களும் தலா 3.6 கோடி  லிட்டர் கழிவு நீரை கையாளும் திறன் கொண்டது. ஏறத்தாழ 75 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள், 600 கி.மீ., நீளத்தில் குழாய்கள் பதித்து கொண்டு செல்லும் வகையில் பணி கள் நிறைவடைந்து தற்போது வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடக் கிறது. முழுமையாக தயார் நிலையில் உள்ள சுத்திகரிப்பு மையத்தில் தற் போது சோதனை அடிப்படையில் சுத் திகரிப்பு பணி நடைபெறுகிறது. கழிவு நீரேற்று மையங்களிலிருந்து ராட்சத குழாய் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர் பல்வேறு கட்டங்களாக சுத்திக ரிப்பு செய்யப்படுகிறது. அதன்பின் கழிவுநீர் துர்நாற்றமில்லாத நல்ல நீராக மாற்றப்படுகிறது. தொடர்ந்து, ஜிக் ஜாக் முறையில் குளோரின்  கலந்து பின் வெளியேற்றப்படுகிறது. தற்போது சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் நொய்யல் ஆற்றுக்கு சென்று சேருகிறது. சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலம், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு இதை வழங்கி னால் விவசாயம் மற்றும் தொழிற் சாலைகளில் நீர் தேவைக்கு தீர்வு ஏற் படும். பிரிக்கப்படும் கழிவுகள் அனைத் தும் தனித்தனியாக சேகரித்து அதற் குரிய பகுதிகளில் அகற்றப்படுகி றது. இதில் மக்கும் கழிவுகளாக பிரிக் கப்படும் கழிவுகள் மற்றொரு பகுதி யில் பிராசஸிங் செய்து உரமாக மாற் றப்படுகிறது. திடக்கழிவுகள் மறு  சுழற்சி பயன்பாட்டுக்காக பிரித்து  அதற்குரிய வகையில் கையாளப்படு கிறது. பாலிதீன் போன்ற கழிவுகள்  தனியாகவும், கண்ணாடி பாட்டில்  போன்ற கழிவுகள் தனியாகவும் சேக ரிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.