பொள்ளாச்சி, ஜூலை 3- பொள்ளாச்சி அரசுப்பள்ளியில் மரம் நடும் விழா சனி யன்று நடைபெற்றது. பொள்ளாச்சி குமரன் நகர் அரசு தொடக்கப்பள்ளி யில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் மரம் நடும் விழா சனியன்று நடைபெற் றது. இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பி னர்கள் நாகராஜ், எம்.ஏ.வி.துரைபாய், கவிதா மணிகண் டன், நகராட்சி ஆணையாளர் எஸ் தானுமூர்த்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட கல்லுக் குழி பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, கிணற்று நீர்வசதி, பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதி களை ஏற்படுத்திய பொள்ளாச்சி நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரி வித்தனர்.