districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காயத்துடன் கண்டறியப்பட்ட இருவாச்சி பறவைக்கு சிகிச்சை

கோவை, டிச.18- பேரூர் அருகே காயத்துடன் கண்டறியப்பட்ட மலை இருவாச்சி பறவையை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். கோவை மாவட்டம், பேரூர் அருகே சென்னனூர், தண்ணீர் பந்தல் பிரிவில் இருந்து அத்திப்பாளையம் செல்லும் சாலை  ஓரத்தில் காயமடைந்து பறக்க முடியாத நிலையில் ஒரு மலை  இருவாச்சி பறவை விழுந்து கிடந்தது. இது குறித்து தகவல றிந்த மதுக்கரை வனச்சரக பணியாளர்கள் சம்பவ இடத் திற்கு வந்து பறக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்த இருவாச்சி பறவையை மீட்டு கோவை மாவட்ட வன அலுவ லர் அலுவலகம் அருகே உள்ள பறவைகள் மறுவாழ்வு மையத் துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வனத் துறையினர் மருத்து வர் மூலம் இருவாச்சி பறவைக்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டது. அங்கு பறவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களை வைத்து தூய்மைப் பணி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாமக்கல், டிச.18- பள்ளி வளாகத்தை மாணவர்களை வைத்து தூய்மைப் பணி செய்யப்படுவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர்கள் வலியு றுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், அண்ணாசாலை பகுதி யில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு  சுமார் 500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இச்சூழ லில், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளி வளா கத்தை சுத்தம் செய்ய நிர்பந்தம் செய்யப்படுவதாக பெற்றோர் கள் குற்றச்சாட்டி வந்தனர். இந்நிலையில், புதனன்று அப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொண்டு வளாகத்தை சுத்தம் செய்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அந்தகாட்சியில், மாணவர்களை அங்கிருந்த ஆசிரி யர் ஒருவர் தூய்மைப் செய்ய கூறுவது போன்றவை இடம் பெற்றுள்ளன. கல்வி பயில வரும் மாணவர்களை வகுப் பறைகளை தூய்மை செய்ய நிர்பந்தம் செய்யப்படுவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கள் வலியுறுத்தியுள்ளது.

கவியருவி திறப்பு: வனத்துறை எச்சரிக்கை

கோவை, டிச.18- பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவி ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண் டும் திறக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டம், ஆனைமலை புலி கள் காப்பகத்தில் உள்ள கவியருவி தமிழ கத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றா கும். இங்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல் வது வழக்கம். இந்நிலையில், தொடர்மழை காரணமாக கவியருவியில் ஏற்பட்ட வெள் ளப்பெருக்கால் கவியருவி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது கவிய ருவிக்கு வரும் நீரின் அளவு சீரானதை தொடர்ந்து புதனன்று அருவியில் சுற்றுலாப்  பயணிகள் குளிக்க ஐந்து நாட்களுக்குப் பிறகு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர். மேலும் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டும் உள்ளதால், சுற்று லாப் பயணிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்ற னர்.

பாமக எம்எல்ஏ-வின் ஆணாதிக்க பேச்சு!

சேலம், டிச.18- ஓமலூர் அருகே கோவில் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, பாமகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள், பெண் களிடம் ஆணாதிக்கத்தோடு பேசிய சம்பவம் கண்டனத்திற்குள்ளகியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், முத்து நாயக்கன்பட்டியில் உள்ள அங்காளம்மன் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கடந்த வாரம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ‘கோவில் உரிமை’ தொடர்பாக இருதரப்பினர் இடையே எழுத மோதலை தொடர்ந்து அதிகாரிகள் நட வடிக்கை எடுத்துள்ளனர். கோவிலை திறக்க உதவிடுமாறு இரு தரப்பு அழைப்பின் பேரில், பாமகவைச் சேர்ந்த சேலம் மேற்கு  சட்டமன்ற உறுப்பினர் அருள் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஒரு தரப் பினர் ஆண்களாகவும், மற்றொரு தரப்பில் பெண்கள் மட்டுமே பேசினர். பேச்சுவார்த்தை யில் கோவில் அரசு நிலத்தில் இருப்பதால், அனைவருக்குமான கோவிலாக மாற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் சூழல் உள்ளது. அதனால், இரு தரப்பும் ஒற் றுமையாக கோவிலை திறந்து விழா நடத்துங் கள் என்று கூறியதை ஒரு தரப்பு ஏற்க மறுத் துள்ளது. இதனால், ஆவேசமடைந்த அருள் எம்எல்ஏ, பெண்களைப் பார்த்து “உங்கள் வீட்டில் ஆம்பள எவனுமே இல்லையா; எல் லாம் பொட்டையா” என பேசினார். இதைக் கேட்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், எதுவுமே நடைபெறாததுபோல மீண்டும் மீண்டும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அருள் எம்எல்ஏ பேசினார். இச்சம்பவத்தையடுத்து பெண்கள் கண் ணீருடன் அழுதனர். இதனால் சுதாகரித்த  அருள், சமாளித்து அனுப்பினார். இந்நிலை யில், பாமகவைச் சேர்ந்த அருள் எம்எல்ஏ,  பேச்சுவார்த்தையின் போது ஆணவத்திமிரு டன் பெண்களிடம் பேசியது தொடர்பான  காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள் ளது. இணையவாசிகள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மூவர் கொலை வழக்கு:  265 சிசிடிவி கேமராக்களில் ஆய்வு

திருப்பூர், டிச.18 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாய், தந்தை  மற்றும் மகனை மர்ம கும்பல் கடந்த மாதம் 28 ஆம் தேதி  வெட்டிக் கொன்றது.  இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டறி வதற்காக 265 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு  செய்து வருவதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அபிஷேக் குப்தா கூறினார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது: சேமலைக் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வ சிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (75). இவர்க ளது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை மர்ம  கும்பல் கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு கொலை  செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச்  சென்ற வழக்கு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிர்ச்சி  அலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியி னர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறு தல் தெரிவித்ததுடன், குற்றவாளிகளை பிடிக்க தமிழ் நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தினர். மூன்று வாரங் களை கடந்தும், வழக்கில் பெரியதாக எவ்வித முன் னேற்றமும் இல்லை.  இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அபிஷேக் குப்தா கூறும்போது, “வழக்கு தொடர் பாக 14 தனிப்படைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்ற னர். தனித்தனியாக பிரித்து ஒவ்வொரு குழுவும் ஒவ் வொரு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த பகுதி யில் 265 சிசிடிவி கேமரா பதிவுகளின் 15 நாள் பதி வான காட்சிகளைக் கைப்பற்றி தனிப்படையினர் தொடர்ந்து குற்றவாளிகளை கண்டறியும் பணியில் ஈடு பட்டுள்ளனர். 265 சிசிடிவி கேமரா பதிவு என்பதால், தொடர்ந்து கண்டறியும் பணியில் தாமதம் ஏற்படும். ஆனால் பணிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக் கின்றன. அதேபோல் திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு  மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த  பெரிய குற்றப் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்க ளின் கை ரேகைகளையும் பார்த்து வருகிறோம். அதே போல் மேற்கண்ட 3 மாவட்ட எல்லைகளில் உள்ள 18  காவல் நிலையங்களிலும், கொடூர குற்றப்பின்னணி உள்ளவர்களின் விவரங்களும் சேகரித்து வருகிறோம். தொடர்ந்து குற்றவாளிகளை கண்டறியும் பணி தீவிர மாக நடந்து வருகிறது”, என்று தெரிவித்தார்.

கோவிலில் கிடைத்த பொன்னினங்கள் வங்கியிடம் அமைச்சர் ஒப்படைத்தார்

கோவை, டிச.18- ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பொதுமக்கள் வழங்கிய பொன்னினங்கள் 28.906 கிலோ தங் கத்தை உருக்க, அறநிலைத்துறை அமைச்சர் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தார்.  கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மக்கள்  வழங்கிய காணிக்கைகள் பயன்பாட் டில் இல்லாதவை பிரித்தெடுக்கப்பட்ட 28 கிலோ 906 கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய் செய்திடும் வகையில் புதனன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவி லில் பாரத் பாரத ஸ்டேட் வங்கி மூலம்  மும்பையில் உள்ள மத்திய அரசின்  தங்கம் உருக்காலைக்கு ஒப்படைக்கும்  நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றம் நீதிபதி துரை சாமி ராஜு முன்னிலையில் வங்கி அதி காரிகளிடம் 28 கிலோ 906 கிராம் ஒப் படைத்தார். இதில், மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் முரளி கிருஷ்ணன் மற் றும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாச மூர்த்தி மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சி யர் கேத்தரின் சரண்யா கோவில் அறங் காவலர்கள் மஞ்சுளா ஆனைமலை பேருராட்சி தலைவர் கலைசொல்லி சாந்தலிங்ககுமார் ஆகியோர் கலந்து  கொண்டனர். முன்னதாக மாசாணியம் மன் கோவிலுக்கு வந்த அமைச்சர் கோ வில் வளாகத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வு செய்தும் மாற்று  திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பேட் டரி கார் போன்றவற்றை பார்வையிட் டார்.

சாலையில் உலாவிய காட்டு யானை

சாலையில் உலாவிய காட்டு யானை கோவை, டிச.18- கவியருவி அருகே சாலையில் காட்டு யானை உலா வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்போது  வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனத்தை  விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சில்லிக்  கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை ஆழியார் நவமலை  மற்றும் வால்பாறை சாலை உள்ளிட்டப் பகுதிகளில் உலா  வருகிறது. மாலை நேரங்களில் உலா வந்த காட்டு யானை தற்போது பகல் நேரங்களிலும் ஆழியார் கவியருவி அருகே  உலா வருவதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும்  மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த மக்கள் பீதியில் உள்ள னர். ஒற்றை யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பி னும் பொதுமக்கள் வால்பாறை சாலையை கடக்கும் பொழுது  கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

தருமபுரி, டிச.18- முறையாக குடிநீர் விநியோகிக்காத நாக மரை ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து,  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்குட்பட்ட நாக மரை கீழ் காலனி பகுதியில் சுமார் 30க்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி  மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் சிறிய அளவிலான நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, மின் மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந் நிலையில், நாகமரை கீழ் காலனி பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான நீர்த்தேக்கத் தொட்டியின் மின் மோட்டார் பழு தடைந்த நிலையில், அவற்றை சரி செய்யக் கோரி பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத் திடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேச மடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி  மன்ற நிர்வாகத்தை கண்டித்து, செவ்வா யன்று நாகமரை - பென்னாகரம் செல்லும்  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த நாகமரை ஊராட்சி  மன்றத் தலைவர் முத்துசாமி, ஏரியூர் காவல்  நிலைய ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக  அலுவலர் வினோத் ஆகியோர் சம்பவ இடத் திற்கு சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்ட னர். அப்போது, பழுதடைந்த மின் மோட்டார் களை சரி செய்து குடியிருப்புகளுக்கு முறை யாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப டும், என உறுதியளிக்கப்பட்டது. அதனை யேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கனமழையால் ஏக்கர் கணக்கில் பயிர் சேதம்

சேலம், டிச.18- கெங்கவல்லி பகுதியில் பெய்த கனமழை யால் ஏக்கர் கணக்கில் பயிர்கள் சேதமடைந் துள்ளதாக, வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா முழுவதும் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி, பயிர்கள் சேதமடைந்தன. இதுதொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் வட் டாட்சியர் மு.பாலகிருஷ்ணன் பேசுகையில்,  கனமழையில் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டி ருந்த நெல், வாழை, மக்காச்சோளம், துவரை  உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. பயிர்  சேதத்திற்கு அரசிடமிருந்து நிவாரணத் தொகை பெறுவதற்குரிய கால அவகாசம் செவ்வாயன்றுடன் நிறைவடைந்தது. சேத மதிப்பு ரூ.6 கோடியே 41 லட்சத்து 72 ஆயி ரம் ஆகும், என்றார். இடிந்து விழுந்த வீடு கெங்கவல்லி, 3 ஆவது வார்டுக்குட்பட்ட  பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது  மனைவி கவிதா (30), தாய் பிச்சையம்மாள் (62), மகன் பிரதாப் (12), மகள் தா்ஷிணி (10) ஆகியோருடன் வசித்து வருகிறார். சங்கர் வேலைக்கும், குழந்தைகள் இருவரும் பள்ளிக்கும் சென்றுவிட்டனர். கவிதாவும், பிச்சையம்மாளும் மட்டுமே வீட்டில் இருந்த போது, ஓட்டு வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந் ததுடன், மேற்கூரை இடிந்து விழந்தது. இதில் வீட்டில் இருந்த இருவரும் நல்வாய்ப் பாக உயிர் தப்பினர். மழை பெய்து இரு நாள்கள் கழித்து வீடு இடிந்த தகவலை யடுத்து வட்டாட்சியர் மு.பாலகிருஷ்ணன் சம் பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து அரசின் அதிகபட்ச நிவாரணத் தொகைக்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந் துரை செய்யப்பட்டுள்ளது.