பொள்ளாச்சி, மே 12- வால்பாறை அருகே சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், ஆனைமலை புலி கள் காப்பகத்திற்குட்பட்ட வரட்டுப்பாறை எஸ்டேட் அருகே உள்ள பழைய வால் பாறை பகுதியில் உள்ள உஸ்மான் என்பவ ருக்கு சொந்தமான தேநீர் கடையின் பின்புறம் கோழிக்கூண்டு அமைக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், இந்த கோழிக்கூண் டில் சிறுத்தை சிக்கியவாறு இறந்துகிடப் பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத் திற்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்ட விசாரணை யில், வனத்திலிருந்து வெளியேறிய இந்த ஆண் சிறுத்தை, இக்கோழி கூண்டிலுள்ள கோழிகளை பிடிக்க முயன்றபோது கூண் டில் சிக்கி உயிரிழந்ததாக தெரியவந்தது. இருப்பினும், வனகால்நடை மருத்துவ குழு வினர் இறந்த சிறுத்தையின் உடலை கைப் பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.