திருப்பூர், டிச.19- அரசு போக்குவரத்து ஊழியர்க ளுக்கு ஊதிய பேச்சுவார்த்தையை உட னடியாக தொடங்க வலியுறுத்தி போக்கு வரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை வழங்கிடவும், 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை உடனே பேசி முடிக்கவும், ஓய்வு பெற்றோருக்கு 110 மாத அகவிலைப்படி உயர்வு உடனே வழங்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களை வெறும் கையுடன் வீட்டிற்கு அனுப்பாமல், ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு கால பணப் பலன்களை வழங்கவும், அவுட் சோர் சிங் முறையை கைவிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் - காங்கேயம் சாலை, அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை தலைவர் எம்.பரமசிவம் தலைமை வகித்தார். இதைத்தொ டர்ந்து நடைபெற்ற வாயிற்கூட்டத்தில், கோரிக்கைகளை விளக்கி திருப்பூர் மண்டல பொதுச் செயலாளர் பி.செல்லத் துரை, ஈரோடு மண்டல பொதுச் செயலா ளர் டி.ஜான்சன் கென்னடி, கோவை மண்டல பொதுச் செயலாளர் எம்.வேளாங் கண்ணி ராஜ், முன்னாள் பொதுச்செய லாளர் எம்.அருணகிரிநாதர், ஈரோடு முன்னாள் நிர்வாகி கே.ரவிச்சந்திரன், ஈரோடு ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் செயலாளர் ஜெகநாதன், சம்மே ளன பன்முக தலைவர் என்.முருகையா, சம்மேளன துணை பொதுச் செயலாளர் வி.தயானந்தம் ஆகியோர் உரையாற்றி னர். முடிவில் திருப்பூர் மண்டல பொரு ளாளர் என்.சுப்ரமணி நன்றி கூறினார். சேலம் சேலத்தில் ராமகிருஷ்ணா சாலை யிலுள்ள போக்குவரத்து தலைமை அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சிஐடியு அரசு விரைவு போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் என்.முரு கேசன் தலைமை வகித்தார். இதில், சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிஐடியு போக்குவரத்து தொழிற் சங்க மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைவர் செம்பன், பொருளாளர் சேகர், துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார், தருமபுரி தலைவர் முரளி, செயலாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.