சேலம், பிப்.14- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும், என வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். மினி பேருந்தை அரசே ஏற்று இயக்க வேண்டும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பி, நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தி னர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியிலுள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, போக்கு வரத்து தொழிலாளர் சங்க மண்டலத் தலைவர் செம்பன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல பொதுச்செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, விரைவு போக்குவரத்து தொழிலா ளர் சங்க நிர்வாகி சந்திரன், ஏஐடியுசி நிர்வாகி தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மண்டலப் பொருளா ளர் சேகர் நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டலத் தலைவர் சி.முரளி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்ட துணைத்தலைவர் முருகன், போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டலச் செயலாளர் எஸ்.சண்முகம், பொருளாளர் பசுவராஜ், கெளரவத் தலைவர் ரகுபதி, ஏஐடியுசி மாநிலத் தலைவர் ரவி, மாவட்டச் செயலாளர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை, சுங்கம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க துணை பொதுச்செயலாளர் ஆர்.லட்சுமி நாராயணன் தலைமை வகித் தார். இதில் போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.வேளாங்கண்ணி ராஜ், உதவித்தலைவர் கோபால், மண்டலப் பொருளாளர் மகேஷ்குமார், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சண்முகம், பணியாளர் சங்க மண்டலப் பொருளாளர் நடராஜன், அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மண்டலச் செயலாளர் சுரேந்திரன், ஆர்இ டபில்யூஏ நிர்வாகி ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஏஐடியுசி மண்டலச் செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.