கோவை, ஜூன் 10- பட்டியலின மாணவிக்கு பாலியல் துன்பு றுத்தல் அளித்ததாக புகார் எழுந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு அந்த பள்ளியின் 10 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை மாவட்டம், ஆலாந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவிக்கு, அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் துன்பு றுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடை பெற்றதாகக் கூறப்படும் நிலையில், கடந் தாண்டு டிசம்பர் மாதம் வெளியே தெரியவந் தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரி யர் கைது செய்யப்பட்டு, டிச.5 ஆம் தேதி யன்று சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இச்சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே தெரி யும் என்பதும், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரி யர் உள்ளிட்ட 10 ஆசிரியர்கள் சம்பந்தப் பட்ட மாணவியை அழைத்து இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது. அதேநேரம் பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்பு றுத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் படி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த, பள்ளியின் ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் என்பவரை பள்ளிக்கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது. அதேபோல் பள்ளியின் தலைமை ஆசிரியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், பள்ளியின் தலைமை ஆசிரிய ராக இருந்தவர் உட்பட 6 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே சொல்லக்கூடாது என தன்னை மிரட்டிய 10 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சியரிடம் புகார ளித்தார். மாணவியின் பெற்றோர் தரப்பில் மாநில குழந்தைகள் நல ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து சம்பந்தப்பட்ட மாணவியிடம் காவல் துறையினர் குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்ட னர். இந்நிலையில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்கள் உள் ளிட்ட 10 பேர் கோவை மாவட்டத்தில் வேறு வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் புதிய ஆசிரியர்கள் நியமிக் கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.