உடுமலை டிச.12- பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகி தத்தை அதிகரிக்கும் நோக்கில் வியாழனன்று உடுமலை யில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் உடுமலை எஸ் கேபி மேல்நிலைப் பள்ளியில் வியாழனன்று ஆசிரியர்க ளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இதை தலைமை ஆசிரியர் பூரணி தொடங்கி வைத்தார். இதில், மெல்ல கற்கும் மாண வர்களை தேர்ச்சி பெற வைப்பது மற்றும் 100 சதவீத தேர்ச் சியை எட்டுவது குறித்து ஆசிரியர்களிடையே கலந்துரை யாடல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிற்பகலில் சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான பயிற்சி 13 ஆம் தேதியும், 14 ஆம் தேதி கணித பாட ஆசிரியர் களுக்கான பயிற்சியும் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்கு ளம், ஆகிய ஒன்றியங்களில் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 10 ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரி யர்கள் கலந்து கொள்கின்றனர்.