பொங்கல் திருநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் குமார பாளையம், பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம் வரகூராம்பாளையம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஒவ் வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட் டிகள் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசி புரம் வட்டம், நாமகிரிப்பேட்டை பேரூ ராட்சி, ஆயில்பட்டி ஊராட்சிக்குட் பட்ட. கிராம பகுதிகளில், விவசாயிகள் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆயில்பட்டி பகுதி யைச் சேர்ந்த விக்கி, விக்னேஷ் சகோ தர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண் டும் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி களில், நாங்கள் வளர்க்கும் காளை களை அழைத்துச் செல்வதை வாடிக் கையாக வைத்துள்ளோம். வெளி மாவட்டங்களில் நடைபெற்ற போட்டி களில் எங்கள் மாடு மிகச்சிறப்பாக விளையாடி, பல்வேறு இடங்களில் பரிசுகளை பெற்றுள்ளது. தற்போது இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி யில் பங்கேற்க வைப்பதற்காக நாங் கள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு மாடு களை தயார் செய்து வருகிறோம்.
மற்ற மாடுகளைப் போல ஜல்லிக் கட்டு மாடுகளை வளர்ப்பது அவ்வ ளவு எளிதானதல்ல. நிறைய செலவு பிடிக்கக்கூடிய மாட்டு தீவனங்களை மாடுகளுக்கு வழங்கி வருகிறோம். ஜல்லிக்கட்டு மாடு வைத்திருப்பதால் பெருமையாக இருக்கிறது. கடந்த காலங்களில் எங்க ஊர்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஜல்லிக் கட்டு மாடுகள் இருந்தது. ஆனால், தற்போது மொத்தமாக எங்கள் ஊரில் 10 நபர்களிடம் மட்டுமே ஜல்லிக்கட்டு மாடுகள் உள்ளன. தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வைப் பதற்காக சிறப்பு பயிற்சிகளை மாடு களுக்கு வழங்கி வருகிறோம். எங்கள் மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவதை பார்க்கும் பொழுது எங்களுக்கு மிக வும் மகிழ்ச்சியாக இருக்கும். இது எங்களுக்கான திருவிழா, நாங்கள் இருவரும் கல்லூரி படிப்பு முடித்து வேறு வேறு வேலைகளில் இருந்தாலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாட்களில், எங்கள் மாடு டன் போட்டிக்கு தயாராகி விடுவோம். இதில் எங்களுக்கு ஒரு ஆனந்தம் இருப்பதால் நிறைய செலவுகள் ஏற் பட்டாலும், அதைப்பற்றி கவலைப் படாமல், தொடர்ந்து ஒவ்வொரு ஆண் டும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங் கள் மாட்டுடன், போட்டிகளில் பங் கேற்று வருகிறோம், என பெருமிதம் தெரிவித்தனர். -பிரபாகரன், பள்ளிபாளையம்