districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பேரிடர் கால இடர்பாடுகள் எதிர்கொள்ள பயிற்சி

உதகை, ஆக.16- உதகையில், பேரிடர் கால இடர்பாடுகள் எதிர்கொள்ள 200 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை  தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர்  வரை வடகிழக்கு பருவமழை மற்றும் ஏப்ரல், மே மாதங் களில் கோடை மழையும் பெய்கிறது. மலைப்பிரதேசம் என்ப தால் மழைக்காலங்களில் வெள்ளம் அதிகளவில் ஏற்பட்டு,  விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. அதேபோல் ஆறு கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படு கிறது. சாலையோரங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட இயற்கை பேரி டர்கள் ஏற்படுகிறது. இந்த பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலை யில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு  பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே நீலகிரி மாவட்டம், மலைப் பிரதேசம் என்ப தால் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு ஒரு  மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் தீயணைப்புத் துறையினர் வர தாமதம் உண்டாகி மீட்பு பணியில் தொய்வு  ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு நீலகிரி  மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை சார்பில், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு பேரிடர்  கால இடர்பாடுகளை எதிர்கொள்ள 200 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தேர்வு  செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், இயற்கை  பேரிடர் உள்ளிட்ட அசம்பாவித நேரங்களில் தங்களையும்  காத்து, பொதுமக்களையும் பாதுகாக்கும் நடவடிக்கை களில் ஈடுபடுவார்கள். இதற்காக இவர்களுக்கு தனியாக அடையாள அட்டை, பயிற்சி முடித்த சான்றிதழ், பேரிடர் கால மீட்பு பணியில் ஈடுபடு வதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.  மேலும், மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக் கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை யினர் செய்தனர்.

80 போதை மாத்திரைகள் பறிமுதல்

கோவை, ஆக.16- கோவையில் 80 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேரை  கைது செய்தனர். கோவை, காந்திமாநகர் பகுதியில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. அதன்பேரில், சரவணம்பட்டி போலீசார் காந்திமாநகர் பகுதியில் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப் படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலி பர்களை விசாரித்து, சோதனை செய்தபோது,  போதை மாத்திரைகளை பதுக்கி விற்பனை  செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போதை மாத்திரை விற்பனை யில் ஈடுபட்டிருந்த பீளமேடு புதூர், மறை மலையடிகள் நகரை சேர்ந்தச் நிதீஷ் குமார் (22), திருச்செங்கோட்டைச் சேர்ந்த பூபதி  (26) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர் களிடமிருந்து 80 போதை மாத்திரைகள் பறி முதல் செய்தனர். இதன்பின் இருவரையும் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவையில் ஸ்டார்ட் அப் திருவிழா – ஆட்சியர்

கோவை, ஆக.16- கோவையில் வரும் ஆகஸ்ட் 19,20ஆம் தேதிகளில் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், தமிழகத்தின் புதுத் தொழில் சூழலை வலுப்படுத்தவும், புதுயுகத் தொழில் முனைவில் உலகளாவிய அளவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடனும் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது, கோயமுத்தூர் கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 19, 20 ஆகிய இருநாட்கள் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நிகழ்வினை நடத்துகின்றது. இதில் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகவும்  வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டிஆர்பி. ராஜா, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இயக்குனர்

சிவராஜா ராமநாதன் கூறுகையில், புத்தொழில் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நடத்துகின்ற இந்த மாபெரும் விழாவில் 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளின் உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் கூடிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.  தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அரங்கில், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தொழில்முனைவோர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாபெரும் தொழில் கனவு என்னும் கருத்துருவோடு தமிழ்நாடு அரசால், முதல்முறையாக புத்தொழில் நிறுவனங்களுக்கென பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வானது, இளைய தலைமுறையினர் இடையே தொழில்முனைவு சார்ந்த நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தவும், சமூகத்தில் தொழில் முனைவு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உதவும் என்றார். 

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி


திருப்பூர், ஆக. 16 – இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு மாநக ரம், வடக்கு ஒன்றியக் குழுக்கள் மற்றும் பகத்சிங் சிலம்பாட்டம்  குழு இணைந்து முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம் பாட்ட போட்டிகளை நடத்தினர். கடந்த ஞாயிறன்று இந்திரா நகர், ஆர்.கே.நகர் பகுதியில்  உள்ள பகத்சிங் சிலம்பாட்டக் குழு மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது. மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில்  13 அணிகள் பங்கேற்றன. இதில் 6 பிரிவுகளில் 210க்கு மேற்பட்ட  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கான  பரிசளிப்பு விழா சுதந்திர தினத்தன்று நடைபெற்றது. பகத்சிங்  சிலம்பாட்ட வகுப்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிக ளுக்கு பரிசளிக்கப்பட்டது.

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருப்பூர், ஆக. 16 - திருப்பூர் மாநகராட்சி, காவிலிபாளையம் புதூர் ஊராட்சி  ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் செவ்வாயன்று தேசியக் கொடியை  ஊர்ப்பிரமுகர் பழனிச்சாமி ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை  ஆசிரியர் பரிமளம், 25ஆவது வார்டு கவுன்சிலர் தங்கராஜ்,  பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முத்துசாமி, மாண வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பகுதி மக்கள்  சுமார் நூறு பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். சுதந்திரப்  போராட்டத் தலைவர்கள், தியாகிகளின் பணிகளை நினைவு படுத்தும் வகையில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.  உதவி ஆசிரியை ஜானி நன்றி கூறினார். 

சிவில் இன்ஜினியர்கள்

திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தினர் செவ்வா யன்று சங்க அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி சுதந்திர  தின விழா கொண்டாடினர். சங்கத் தலைவர் எஸ்.ஜெயரா மன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் ஆர். பிரகாஷ் வரவேற்றார். முன்னாள் நிர்வாகிகள் சௌ.ஸ்டா லின்பாரதி, எஸ்.பொன்னுசாமி, பி.கே.முரளி வாழ்த்திப் பேசி னர். துணைச் செயலாளர் எஸ்.ராஜசேகர் உறுதிமொழி  வாசிக்க அனைவரும் இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டு  உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பொருளாளர் டி.மகேஷ்கு மார் நன்றி கூறினார்.

பின்னலாடை நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு

திருப்பூர், ஆக. 16 – திருப்பூரில் பின்னலாடை உற்பத் திக்கு மூலப்பொருளாக இருக்கும் பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூ.10  வீதம் அதிகரித்து எஸ்எஸ்எம் தனியார்  நூற்பாலை நிர்வாகம் அறிவித்துள் ளது.  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக,  மாதந்தோறும் முதல் தேதியில் நூல் விலை அறிவிக்கும் நடைமுறை இருந்து  வந்தது. எனினும் இனி சந்தை நிலவரத் துக்கு ஏற்ப நூல் விலையை அவ்வப் போது தெரிவிப்பதாக கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தனியார் நூற்பாலைகள் அறி வித்தன. இந்த நிலையில் திருப்பூர் பின்ன லாடை உற்பத்திக்கு நூல் சப்ளை  செய்து வரும் முன்னணி நூற்பாலைக ளில் ஒன்றான எஸ்எஸ்எம் நிறுவனம் புதன்கிழமை கிலோவுக்கு ரூ.10 வீதம்  அதிகரித்து அறிவிப்பு செய்துள்ளது. பொதுவாக திருப்பூரின் பின்னலாடைத்  தொழில் கடந்த மூன்று மாதங்களுக்கு  மேலாக வரலாறு காணாத மந்த  நிலையைச் சந்தித்து வருகிறது. புதிய  ஆர்டர்கள் வருகை எதிர்பார்த்த அள வுக்கு இல்லாதபோதும், நூல் கொள்மு தல் செய்வது அதிகரிக்காதபோதும், விலையை உயர்த்தும் நிலைக்குத் தள் ளப்பட்டிருப்பதாக நூல் வர்த்தகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக பெருமளவு நூல் தேங்கி யிருக்கும் நிலையில், பழைய விலை யில் நூலை பின்னலாடை நிறுவனங்க ளுக்கு சப்ளை செய்தால் நஷ்டத்தைச்  சந்திக்கும் நிலை உள்ளது. எனவேதான் நூல் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு  இல்லாதபோதும் தற்போது பஞ்சு விலை உயர்ந்துள்ளதால்,

நூல் விலை யையும் உயர்த்த வேண்டிய நிலை நூற் பாலைகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றும்  அவர்கள் தெரிவித்தனர். தொழில் நிலை மிக மோசமாக இருப் பதால் என்ன விலையை உயர்த்தினா லும் பலர் நூல் வாங்கும் நிலையில் இல்லை. அதே சமயம் அவசியத் தேவைக்காக நூல் வாங்கக் கூடியவர்க ளும் வேறு வழியில்லாமல் கூடுதல் விலைக்கு நூல் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  தற்போது விலை உயர்வைத் தொடர்ந்து, ஒரு கிலோ 10ஆம் நம்பர்  கோம்டு நூல் ரூ.175-க்கும், 16-ஆம்  நம்பர் ரூ.185-க்கும், 20ஆம் நம்பர் கோம்டு நூல் ரூ.243-க்கும், 24-ஆம்  நம்பர் ரூ.255-க்கும், 30ஆம் நம்பர் ரூ.265 -க்கும், 34ஆம் நம்பர் ரூ.280-க்கும்,  40ஆம் நம்பர் ரூ.300-க்கும், 20ஆம் நம்பர்  செமி கோம்டு நூல் கிலோ ரூ.235-க்கும், 24ஆம் நம்பர் ரூ.245-க்கும், 30ஆம் நம் பர் ரூ.255-க்கும், 34ஆம் நம்பர் ரூ.270-க் கும், 40ஆம் நம்பர் ரூ.290-க்கும் விற் பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பஞ்சு விலை உயரத் தொடங்கி இருப்பதால் நூல் விலையையும் உயர்த்த வேண்டிய நிலைக்கு நூற்பா லைகள் தள்ளப்பட்டுள்ளன. ஆனால் ஏற்கெனவே நெருக்கடியைச் சந்தித்து  வரும் பின்னலாடை நிறுவனங்கள் இத னால் மேலும் சிக்கலைச் சந்திக்கும் நிலைக்குப் போயுள்ளன. திருப்பூர் பின் னலாடை நிறுவனங்களுக்கு நெருக்கடி யான சூழ்நிலை மென்மேலும் அதிக ரித்து வருவதாக தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

அர்ஜூன் சம்பத் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், ஆக.16- சமூகநீதி, இடஒதுக்கீடு கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வரும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர் ஜூன் சம்பத் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை நிறுவனத் தலைவர் அ.சு. பவுத்தன் வலியுறுத்தியுள்ளார். திருப்பூர், கணபதிபாளையம், மாதேஸ்வரன் நகரில் இந்து மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசுகையில், சமூகநீதி, இடஒதுக் கீடு கொள்கைகள் மாறினால்தான் சாதி கலவரங்கள் நீங்கும் என்று பட்டியலின மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் வகையில் சாதியக் கண்ணோட்டத்துடன் பேசியுள் ளார். மேலும், பட்டியலின மக்கள் உரிமைக்காக பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தொடர்ந்து இழிவுபடுத்தி அவதூறு பரப்பி வருகிறார். எனவே, சாதியக் கண்ணோட்டத்துடன் சமூகநீதி, இடஒதுக்கீடு கொள் கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவரும் அர்ஜூன் சம்பத்  மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தியுள்ளார்.

கே.சுப்பராயன் எம்.பி., கே.காமராஜ் மீது ரயில்வே போலீசார் பதிந்த வழக்கு ரத்து

திருப்பூர், ஆக.16– ஒன்றிய அரசை எதிர்த்து திருப்பூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு தலைமை ஏற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்டோர் மீது  ரயில்வே போலீசார் பதிவு செய்து நிலுவை யில் இருந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு இடதுசாரி கட்சி கள் இணைந்து ஒன்றிய அரசின் பொருளா தாரக் கொள்கைகளுக்கு எதிராக ரயில் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டன. அதன்ஒரு பகுதியாக திருப்பூரில் நடைபெற்ற ரயில் மறி யல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.சுப்பராயன், அக்கட்சி யின் அப்போதைய மாவட்டச் செயலாளர் எம். ரவி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்டச் செயலா ளர், கே.காமராஜ் ஆகியோர் தலைமை ஏற்ற னர். இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங் கேற்றனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அதேசமயம் ரயில்வே காவல் துறையினர் மார்க்சிஸ்ட் கட்சியின் கே.காமராஜ், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன் எம்.பி., எம்.ரவி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்தது. கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1-ல் இந்த வழக்கு விசா ரணை நிலுவையில் இருந்தது. இந்நிலை யில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் முறையீடு மனு தாக்கல் செய்தார். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்திய வழக்கறிஞர் சங்க தென் சென்னை மாவட்டச் செயலாளர் ப.மோ.சுபாஷ், வழக்கறிஞர் எஸ்.பரணிதரன் ஆகி யோர் ஆஜராகி வாதாடினர். இவ்வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதையடுத்து 11 ஆண்டு காலமாக நிலு வையில் இருந்த, மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டதால் போடப்பட்ட ரயில்வே போலீசாரின் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக் கில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

வழிப்பறி: ஒருவர் கைது

கோவை, ஆக.16- கோவை, சுண்டக்காமுத் தூர் மெயின் ரோடு, அசோக் நகர் அருகே டாஸ்மாக் கடை யில், ராமநாதபுரம் மாவட் டத்தைச் சேர்ந்த மகேந்திரன்  (34) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியிலிருந்த போது,  வந்த உக்கடத்தைச் சேர்ந்த  சுபாஷ் என்பவர், மகேந்தி ரனிடம் கத்தியை காட்டி, ரூ.300யை பறித்து சென்றார்.  செல்வபுரம் போலீசார் வழக் குப்பதிவு செய்து, சுபாஷை (23) கைது செய்தனர். சிறை யில் அடைத்தனர்.