உதகை, ஜூலை 5 - உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக் கான சதுரங்க போட்டி குறித்து பயிற்சி முகாம் செவ்வா யன்று நடைபெற்றது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை செஸ் விளை யாட்டில் மேம்படுத்துவதற்காக அரசு பள்ளிகளில் பணி யாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக விளையாட்டு குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப் பட்டது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோ தரன் தொடங்கி வைத்தார். செஸ் போட்டிகள் பள்ளிகளில் நடத்துவது குறித்து மாவட்ட உடற்கல்வி அலுவலர் ராஜேஷ் விளக்கம் அளித்தார். இதில், 70க்கும் மேற்பட்ட அரசு பள்ளி களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த முகா மில் செஸ் விளையாட்டு விதிகள், நுட்பங்கள் குறித்து விளக் கம் அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு செஸ் விளை யாட்டை எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்றும், அவர்களை திறமையானவர்களாக மாற்றுவது குறித்தும் பயிற்சி அளிக் கப்பட்டது.