districts

img

பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி முகாம்

திருப்பூர், ஏப்.23 - திருப்பூர் மாவட்ட அளவிலான பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர் பயிற்சி முகாம் ஞாயிறன்று நடை பெற்றது. திருப்பூர்–தென்னம்பா ளையம், வேலன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடை பெற்ற இம்முகாமுக்கு மாவட்ட பாலர் பூங்கா பொறுப்பாளர் சம்பத்  தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட பாலர் பூங்கா  சார்பில் ஒருங்கிணைப்பா ளர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. “மொழி விளையாட்டு மற்றும் கணித விளையாட்டு” என்ற  தலைப்பில் அமலா ராஜன் பயிற்சி  அளித்தார். இம்முகாமில், மாநில பாலர்  பூங்கா பொறுப்பாளர் உதய சங்கர் “பாலர் பூங்கா அமைப் பின் நோக்கம் மற்றும் தேவை கள்” குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். மேலும் மாணவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எளிய முறையில் பல்வேறு கதை கள் மூலமாக அவர்களிடையே இலக்கிய மற்றும் அறிவியல் ஆர்வத்தை சரிதா ஜோ தூண்டி னார். நண்பகலில், மாணவர்களை மூன்று பிரிவாக பிரித்து அறிவி யலை இயக்க தன்னார்வலர்கள் கணித விளையாட்டுகள், காகிதம் மடிப்பு கலை மற்றும் எளிய அறிவியல் பரிசோதனைகள் ஆகிய பயிற்சிகளை தனித்தனியே மிகச் சிறப்பாக செய்து காட்டினர். மாவட்டம் முழுவதும் இருந்து 125 பேர் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சா கமாகவும் பயிற்சியில் கலந்து  கொண்டு பல்வேறு செயல்பாடு களை செய்தனர். நிறைவாக, வாலிபர் சங்கம்  முன்னாள் மாநிலத் தலைவர் செ. முத்துக்கண்ணன் நிறைவுரை யாற்றினார். இந்நிகழ்வை, மாவட்ட பொறுப் பாளரான வி.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட செயலாக்க குழு உறுப்பி னர்கள் முழுமையாக ஒருங்கி ணைத்தனர்.