ஈரோடு, நவ.15- ஈரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வழிகள் குறித்து அமைச்சர் முத்துசாமி வியாழனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறியுள்ளது. முக்கிய சாலைகளான மேட்டூர் சாலை, பிரப் சாலை, ஆர்கேவி ரோடு, சத்தி சாலை உள்ளிட்டவை நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக மாறியுள் ளது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு களை அகற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவ டிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் ரவுண்டானா அமைப்பது பற்றி தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய் வின்போது, ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.