நாமக்கல், ஜூலை 9- ராசிபுரம் பேருந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றும் நடவடிக் கையை வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நக ராட்சியாக செயல்பட்டு வந்த நிலை யில், ஏற்கனவே பழைய பேருந்து நிலை யம் மாற்றப்பட்டு புதிய பேருந்து நிலை யம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படு வதாக கூறி பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வருவதாக கூறப்ப டுகிறது. இதனையறிந்து ராசிபுரம் பகு தியில் உள்ள வர்த்தகர்கள் பேருந்து நிலையம் மாற்றப்படும் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நகரப் பகுதியில் அதிகளவில் வியாபா ரம் நடக்கும் நிலையில் 3 கிலோமீட் டர் தூரத்துக்கு அப்பால் பேருந்து நிலை யத்தை மாற்றுவதை ஏற்கமுடியாது. அரசியல் லாபத்துக்காக, வியாபார நோக்கில் இங்குள்ள அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர். எனவே பேருந்து நிலைய இடமாற்ற நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றனர். முன்ன தாக, ராசிபுரம் நகர வர்த்தக சங் கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள், திங்களன்று பேரணி யாக சென்று நாமக்கல் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.