districts

img

திருப்பூரில் 5 மையங்களில் மறியல்: மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டத்தில் முடிவு

திருப்பூர், ஜன.31- பிப்ரவரி 16 அன்று ஒன்றிய அரசு  அலுவலகங்கள் முன்பு திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம்,  உடுமலை ஆகிய மையங்களில் மறி யல் போராட்டம் நடத்த போவதாக மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு கார்ப்ப ரேட் வகுப்புவாத எதேச்சதிகாரக் கூட் டினை தொடர்ந்து முன்னெடுத்து வரு கிறது. மேலும், தொழிலாளர் விரோத, விவசாய விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளைக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த போக்கை கண்டித்தும், மக்க ளின் உண்மையான வாழ்வாதார பிரச்சினைகளை மீண்டும் தேசிய அளவில் முக்கிய நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு வர வரும் பிப்.16 ஆம்  தேதி தொழிலாளர் வேலை நிறுத்தம்,  கிராமப்புற பந்த் மற்றும் ஒன்றிய அரசு  அலுவலகங்கள் முன்பு மறியல்  போராட்டம் நடத்த மத்திய தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.  அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய  விவசாயிகள் முன்னணி ஆலோ சனை கூட்டம் புதனன்று தியாகி பழ னிசாமி நிலையத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர்  பி.ஆர்.நடரா ஜன், பனியன் சங்கச் செயலாளர் என். சேகர், சிஐடியு கட்டுமானத் தொழிலா ளர் சங்க மாநில பொதுச்செயலாளர்  டி.குமார்,  எல்.பி.எப். சங்க துணைத்  தலைவர் ரங்கசாமி மற்றும் அறிவழ கன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் பெரு மாள், எம்.எல்.எப். மனோகரன்,  ஹெச்.எம்.எஸ். தலைவர் முத்து சாமி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.சின்ன சாமி, மாவட்ட துணைத் தலைவர் கொளந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.    இதில், வரும் பிப்.2ஆம் தேதிக் குள் அனைத்து தொழிற்சாலைக ளுக்கும், பொதுத்துறை நிறுவனங்க ளுக்கும் வேலை நிறுத்த நோட்டீஸ்  வழங்குவது. இரண்டு நாட்கள் தெரு முனை பிரச்சாரம் நடத்துவது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கட் சிகளின் மாவட்ட நிர்வாகிகளை சந் தித்து ஆதரவு கேட்பது. பிப்ரவரி  16 அன்று ஒன்றிய அரசு அலுவல கங்கள் முன்பு திருப்பூர், அவிநாசி,  ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை  ஆகிய மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது. இப்போராட் டத்திற்கு வாலிபர், மாணவர், மாதர்,  விவசாயத் தொழிலாளர், வழக்கறி ஞர்கள், சிறுதொழில் சங்கங்களின் ஆதரவை கேட்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.