உதகை, ஏப்.30- தொடர் விடுமுறை கார ணமாக உதகைக்கு ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணி கள் வந்ததால் சீசன் களை கட்டி உள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படுவது உதகை யாகும். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகும். அப்போது இதமான காலநிலை உதகை யில் நிலவும். இதனை கண்டு ரசிப்பதற்கு சுமார் 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படும். இந்நிலையில், இந்தாண்டுக்கான கோடை சீசன் தற்போது நடைபெற்று வருவதாலும், பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலா பயணி கள் வருகை என்பது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவை பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதால் காலை முதல் மாலை வரை கூட்டம் அலைமோதுகிறது. பூங்கா விற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண் ணாடி மாளிகை, பெரணி இல்லம், இத்தா லியன் பூங்கா உள்ளிட்ட முக்கிய பகுதி களை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், மே மாதம் நடைபெற உள்ள 125 ஆவது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கண்ணாடி மாளிகை மூடபட்டு, அங்குள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகளை மாற்றும் பணிகள் தொடங்கி உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் கிக்யூ புல்வெளி யும் பராமரிப்பு பணிக்காக சுற்றுலா பயணி கள் புல்வெளிக்குள் செல்ல தடையும் விதிக் கபட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் சிறிது ஏமாற்றமடைந்திருந்தாலும், மற்றொரு புல்வெளியில் அமர்ந்து விளையாடி பொழுதை களித்து செல்கின்றனர். இதனால் இந்தாண்டிற்கான சீசன் தற்போதே களை கட்டி உள்ளது. இந்தாண்டு கோடை வெயில் வழக்கத் தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இனி வரும் நாட்களில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிக ரிக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் போதிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.