பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மாலை 6 மணிக்கு மேல் வால்பாறை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், புலி,யானை, வரையாடு.சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் உள்ளன.இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாதையை ரசிக்கவும், ஆங்காங்கே தென்படும் விலங்குகளை காணவும் இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர் அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது வனவிலங்குகளை துன்புறுத்துவதாகவும்,வடக்கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனை அடுத்து வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பணிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி மறை மட்டுமே அனுமதி மாலை ஆறு மணிக்கு மேல் ஆழியார் சோதனை சாவடி வழியாக வால்பாறை செல்ல சுற்றுலா பயணிகள் செல்ல தடை, விதித்துள்ளது
மேலும், ஆழியார் சோதனை சாவடியை தாண்டி வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனப்பகுதியில் செல்லக்கூடாது எனவும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விதிமுறைகளை மீறும் சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.