உடுமலை, ஆக. 21 - வானிலை இயல்பு நிலை யில் உள்ளதால் புதன்கி ழமை முதல் பஞ்சலிங்க அரு விக்கு செல்ல சுற்றுலாப் பய ணிகள் அனுமதிக்கப்பட் டுள்ளனர். உடுமலை திருமூர்த்தி மலையில் சுற்றுலாப் பயணிகள் அரு வியில் குளிக்கும் வகையில் செயற்கையாக உருவாக் கப்பட்ட பஞ்சலிங்க அருவியில் மழை காலங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், கோவில் நிர்வாகத் தின் சார்பில் மழை பெய்யும் போது சுற்றுலாப் பயணிக ளுக்கு தடை விதிப்பார்கள். கடந்த சில நாட்கள் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக மலை அடிவாரத்தில் இருக்கும் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்த நிலையில், சுற்றுலாப் பயணி கள் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கபட்டிருந்தது. இந்நிலையில் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தாலும், வானிலை இயல்பு நிலையில் உள் ளதால் புதன்கிழமை முதல் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பய ணிகள் மற்றும் பக்தர்கள் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.