நாமக்கல், ஜன.25- 6 மாதங்களாக நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாசிலா அருவிக்கு சுற் றுலாப் பயணிகள் செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித் துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள் ளது. இங்கு அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிகை அம்மன் கோவில், மாசி பெரி யண்ணன் சாமி கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, வாசலூர்பட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்று லாத் தலங்கள் உள்ளன. விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்நிலையில் அரியூர்நாடு பஞ்சா யத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்தனர். அருவிக்கு செல் லும் பாதை மற்றும் பூங்காவில் பரா மரிப்பு பணிகள் நடைபெறுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதென அதி காரிகள் தெரிவித்தனர். ஆறு மாதங்க ளாக பராமரிப்புப் பணிகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில், வேலைகள் முடிந்த நிலையில், வியாழனன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வந்துள்ளார். மேலும், வியாழனன்று முதல் அனைத்து சுற் றுலாப் பயணிகளும் வந்து செல்ல லாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.