தருமபுரி, செப்.17- காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயி ரம் கனஅடியாக குறைந்துள்ளதால், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற் றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், இரு மாநில காவிரி கரையோர வனப்பகுதிகளில் அவ்வப்போது பெய்த திடீர் மழையின் காரணமாக ஒகேனக்கல் நீர்வரத்து கடந்த இரண்டு தினங்க ளாக அதிகரித்து இருந்தது. தற்போது கர்நாடக அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் கார ணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து திங்களன்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 12,000 கன அடி யாக இருந்த நிலையில், செவ்வாயன்று காலை விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. மேலும், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப் பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நீக்கி, செவ்வாயன்று முதல் அருவிகள் மற்றும் காவிரி கரையோரப் பகுதி களில் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளார். கர் நாடகா அணைகளின் நீர்திறப்பு மற்றும் கரையோர வனப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரண மாக அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் பிலிகுண்டுலு பகுதி யில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத் தின் அளவுகளை கண்காணித்து வருகின்றனர்.